| கன்னிப் பெண்கள் காதல் மயக்கம் மிகும்படி திருவீதியில் எழுந்தருளும்     மணக்கோலத்தால் ஆம் புத்தழகை நோக்காமே வெறுவியேனாக
 அடியேனைத் தள்ளுதல் ஊழேயோ!
 		| மரகத வடிவாளும் மழவிடை அனையாயும் ஒருமணி யணையும்பர் இனிதுறை உயர்கோலம்
 இருவிழி களிகூரப் பருகுவ தில்லாமே
 பரிவுற அடியேனைத் தள்ளுதல் பாங்கேயோ.       278
 |       மரகத நிறமுடைய அம்மையும் இள ஏறுபோலும் நீயும் ஒப்பற்ற     மணியினா லமைந்த தவிசின்மேல் இனிதிருக்கும் ஆன்மாக்கள் உயர்தற்கு
 ஏதுவாகிய திருமணக்கோலத்தை நோக்கி இருவிழிகளும் களிப்புமிகப்
 பருகாதவாறு வருந்துமாறு அடியேனைத் தள்ளுதல் பண்பேயோ!
 		| வந்தனர் மணஞாட்பின் மலரடி தொழுவார்க்குத் தந்திடும் அருள்நோக்கம் தமியனும் உடன்நின்று
 சிந்தையின் மகிழ்வெய்தப் பெறுவது செய்யாமே
 நைந்திட அடியேனைத் தள்ளுதல் நலமேயோ.     	279
 |       திருமணக் குழாத்துள் வந்து மலரொக்கும் திருவடிகளை     வணங்குவார்க்கு வழங்கும் திருவருட் பார்வையைத் தனியனும் அவருடன்
 கூடியிருந்து சிந்தை களிப் பெய்தப் பெறாமே வருந்திட அடியேனைத்
 தள்ளுதல் நலமேயோ!
 		| அன்றியும் உயர் காஞ்சிப் பதியினில் அடியேற்கு மன்றநின் அணிமைக்கண் வைகிட வரம்ஈந்தாய்
 இன்றது தனைமாற்றி எழில்வளர் பொதியத்திற்
 சென்றினி துறைநீஎன் றருளிய செயல்என்னே.     280
 |       மேலும், உயர்ந்த காஞ்சிமாநகரில் நின்னருகில் அறுதியாகத் தங்கிட    அடியேனுக்கு வரமளித்தனை. இப்பொழுது அதனை மாற்றி அழகுடைய
 பொதிகை மலையில் சென்று இனிது தங்குக நீ என்றருளிய ஆணை
 என்னேயோ!
 		| என்னையும் உடையாய்நின் திருவருள் இதுவோஎன் றின்னன பலபன்னி இருவிழி புனல்வார
 அந்நிலை நனிஏங்கி அழுதழு தயர்வெய்தும்
 தன்னிகர் தமிழ்வாய்மைத் தலைவனை எதிர்நோக்கி.    281
 |       என்னையும் அடிமையாக உடையவனே! நின் திருவருள் வெளிப்பாடு     என்னளவில் இவ்வளவேயோ! என்றிவைபோல்வன பலவும் பன்முறை
 பெரிதும் இரங்கி அழுதழுது தளர்ச்சியடையும் தன்னையே தனக்கு
 ஒப்பாகிய தமிழ்க்கு உண்மைத்தலைவராகிய அகத்தியரை எதிர்நோக்கி,
 |