|      தாமரை மலரை ஒக்கும் ஒளியுடைய திருமுகம் மலரவும், கடைக் கண்    அருள் சிவகாமி அம்மையாரிடத்துப் படரவும், ஐம்பெரும் பூதங்களையும்
 ஆக்கவும் நிறுத்தவும் அழிக்கவும் வல்ல கெடலரிய புகழையுடைய குறளர்
 குழாம் கைகொட்டித் தோள்புடைத் தாடவும்,
 		| ஊன மில்பசுங் கொடியென ஒல்கிநின் றொருபால் கான ளாங்குழல் மலைமகள் கண்டுகண் களிப்ப
 வான நாட்டவர் கற்பக மலர்மழை பொழியத்
 தானம் எங்கணும் அரகர சயஒலி தழைப்ப.      305
 |       குறைபாடில்லாத பசிய கொடியைப்போல ஒதுங்கி நின் றொரு பக்கம்    வாசனை வீசுகின்ற கூந்தலையுடைய சிவகாமியம்மை நோக்கிக் கண்கள்
 களிப்புறவும், தேவர் கற்பக மலர்களை மழையொப்பப்பொழியவும்,
 எவ்விடத்தும் அர அர சய சய (வெல்க) என்னும் பொருளுடைய ஒலி
 தழைக்கவும்,
 		| கட்டு வார்முர சாதிய பெருங்கணப் பூதர் எட்டு நாகமும் மாகமும் செவிடுற எழுப்ப
 மட்டு வார்ந்தெனச் செவியெலாம் அண்ணிக்கும் மதுரம்
 பட்ட தீங்கிளை நரப்பியாழ் கின்னரர் பயில.     306
 |       வீக்கிய வார் முரசம் முதலிய வாச்சியங்களைப் பூத கணங்கள்     எண்திசை யானைகளும் விண்ணவரும் செவிடு படும்படி முழக்கவும், தேன்
 பாய்வ தொப்பச் செவிநிரம்பத் தித்திக்கும் சுவையுடைய இனிய கிளை
 என்னும் நரம்புடைய யாழைக் கின்னரர் மீட்டவும்,
 		| வேதம் ஆயிரம் ஒருவயின் வெண்குடப் பணில நாதம் ஆயிரம் ஒருவயின் நலங்கிளர் முழவப்
 பேதம் ஆயிரம் ஒருவயிற் பெரும்புனற் பரவை
 ஓதம் ஆயிரம் ஆர்த்தெனத் தழங்கொலி ஓங்க.   307
 |       வேதம் பலவும் ஒரு புறமும், குடம்போலும் வெண்சங்குகள் பலவும்    ஒருபுறமும், மங்கல மிகும் பல்வகை மத்தளங்கள் ஒரு புறமும் ஆகப் பெரு
 நீரையுடைய கடல் பலவற்றின் ஒலியை ஒப்ப ஒலிக்கும் ஒலி பெருகவும்,
 		| நடிக்கும் அற்புத நாடகங் காண்டலும் புளகம் பொடிக்கும் மேனியன் புனல்பொழி விழியினன் துதிகள்
 படிக்கும் நாவினன் அஞ்சலி பற்றிய கரத்தன்
 கடிக்கு றுந்துழாய்க் கண்ணியான் படிமிசை வீழ்ந்தான்.   308
 |       ஞானத் திருக்கூத்தைக் காணுதலும் புளகம் அரும்பிய திருமேனியராய்     நீர் வாரும் விழியினராய்த், தோத்திரம் நவிலும் நாவினராய், அஞ்சலி
 குவித்த கரத்தினராய் மணத்தையுடைய சிறியதுழாய் மாலையை முடியிற்
 சூடிய திருமால் பூமியிற் படிய வீழ்ந்தனர்.
 |