|      சங்குகளும், ஊது கொம்பு, தாரை, காகளம், சின்னம், குழல், வங்கியம்     என்னும் துளைக்கருவிகளும், வீணையாகிய நரம்புக் கருவியும், பேரிகை,
 முரசு, தம்பட்டம் என்னும் தோற்கருவிகளும் கடல் மடை திறந்தா லொப்ப
 முழங்கவும்,
 		| கின்னரர் கருடர்கிம் புருடர் பாண்செயக் கன்னியர் எதிர்எதிர் கலவி ஆடிடத்
 துன்னிய முனிவரர் துன்றும் வேதியர்
 என்னரும் மறைமுழக் கெடுத்துச் சூழவே        	347
 |       தேவசாதியினர் இவர் பாடவும், மகளிர் எதிர் எதிர் கலந்து ஆடவும்,    நெருங்கிய முனிவரரும் தெளிந்த அந்தணர் எவரும் வேதங்களை
 எடுத்தோதிச் சூழவும்,
 		| ஐவகைப் பிரமமும் அங்கம் ஆறும்ஓர் கைவளர் முகனுடைக் கடவுள் வேழமும்
 கொய்விரைக் கடம்பணி கோவும் ஓகையான்
 வைகும்அச் சூழலை வலங்கொண் டெய்துவாள்.   	348
 |       பஞ்சப் பிரம மந்திரங்களும், சடங்க மந்திரங்களும் அடங்கிய    பிரணவத்தை ஓர் துதிக்கை வளர் முகமாகவுடைய யானைமுகக்
 கடவுளும், கடப்ப மலர் மாலையை அணிந்த முருகப் பெருமானாரும்
 எழுந்தருளியிருக்கும் இருக்கையை வலம் வந்து அடைந்தனர்.
 		| ஐங்கரப் பிள்ளையை நிருதி ஆசையில் செங்கைவேல் இளவலை உலவைத் திக்கினும்
 உங்குறு பூசையின் உவப்பச் செய்துபோய்
 மங்கல நந்திவாழ் வாய்தல் நண்ணியே.         	349
 |       மூத்த பிள்ளையாரைத் தென்மேற்காகிய நிருதி திக்கினும், இளைய    பிள்ளையாரை வடமேற்காகிய வாயு திக்கினும், மிகு பூசனையால்
 மகிழ்வுறுத்திப் போய் மங்கல குணங்களையுடைய நந்திபிரானா ருறையும்
 திருவாயிலை நணுகி,
 		| வாயிலோர் பூசனை மரபின் ஆற்றினாள் மாயிரு மறைத்தனி மாவின் நீழல்வாழ்
 நாயனார் தமைவிழி நயப்பக் காண்டலும்
 மீயுயர் காதலான் வீழ்ந்தெ ழுந்தனள்.           350
 |       துவார பாலகர் பூசனையை முடித்துச் சென்று வேத மாமரத்தின்     நீழலில் வாழ்கின்ற திருவேகம்ப நாதரைக் கண்களிப்பக் கண்டபொழுதே
 மிக்குயர்ந்த பெரு விருப்பினால் வணங்கி எழுந்தனர்.
 		| ஒருங்கிய மனத்தின் அஞ் செழுத்தும் ஓதியே கருங்குழற் கற்றைமேற் குவித்த கையொடும்
 |  |