| இறைவன் தழுவக் குழைதல்	 		| மணிமுலைக் குவட்டி னோடு வளைக்கையால் நெருக்கிப் புல்லித் தணிவருங் காதல் விம்மக் காதலி தழுவ லோடும்
 திணிஇருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி
 அணிவளைத் தழும்பி னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர்.   380
 |       அழகிய கொங்கைச் சிகரத்தோடும் வளையை யணிந்த கைகளால்     இறுகத் தழுவி, வற்றாத காதல் பொங்கக் காதலியார் தழுவவும் செறிந்த
 இருளைத் துரக்கும் சுடர் விடுஞ் சோதித் திருவுருவம் குழைந்து காட்டி
 அழகிய வளையற்சுவடும் முலைச்சுவடும் ஐயர் பூண்டுகொண்டனர்.
 கலி விருத்தம்	 		| வற்றிநின் றருந்தவம் முயன்று பன்மறை கற்றவர் உணர்வையுங் கடந்த பேரொளி
 சிற்றிடைத் திருந்திழைத் தேவி வால்வளைப்
 பொற்றழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.       381
 |       பட்டினி விட்டு உடம்பு வாடிநின் றரிய தவத்தை முயன்று பல    கலைகளையும் கற்று அதனால் ஆய அறிவையும் கடந்த பேரொளிப்
 பொருள் சிறிய இடையையும் திருந்திய அணிகளையும் உடைய
 தேவியாருடைய வெள்வளையின் அழகிய வடுவொடும் முலைச் சுவடும்
 அணியாகப் பூண்டு கொண்டதே!
 		| உருஅரு அணுமலை உண்மை இன்மைமற் றிருள்ஒளி யன்றிநின் றிலகு பேரொளி
 மருமலர்க் கருங்குழல் மங்கை வால்வளைப்
 பொருதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.       382
 |       உருவமும் அருவமும், அணுவும் மலையும், உண்மையும் இன்மையும்    இருளும் ஒளியும் ஆகிய இவையிற்றின் வேறுபட்டுநின்றுவிளங்கும் பேரொளி,
 மணமுடைய மலரணிந்த கரிய கூந்தலையுடைய காமாட்சி அம்மையின்
 வெள்ளிய வளைகளின் அழுந்து தழும்பொடு முலைச்சுவட்டினையும்
 அணியாகப் பூண்டதே.
 		| பெருவிரல் அளவையின் உளத்திற் பேணிநின் றுருஉயிர் முழுவதும் ஆட்டும் ஒள்ளொளி
 அருள்பொழி குறுநகை அணங்கு வால்வளைப்
 புரிதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.         383
 |       ஆன்ம அறிவின்கண் விரும்பிப் பெருவிர லளவாக நின்று நின்று    உடம்புகளையும் உயிர்களையும் முற்றவும் தொழிற்படுத்தும் ஒளிக்குள்
 ஒளி அருளைப் பொழிகின்ற புன் முறுவலையுடைய அம்மையாரின்
 வெள்வளையாற் செய்த தழும்பொடு முலைச்சுவட்டினையும் பூண்டு
 கொண்டதே.
 |