| 		| உருக்கிய செழும்பொனின் மணிகள் ஒன்பதும் நெருக்குறப் பரப்பிஓ வியம்நி கழ்த்திய
 திருக்கிளர் பலகைமேல் இணக்கித் தெள்ளொளி
 பெருக்கும்வெண் பளிங்கினாற் பித்தி யாக்கினார்.    6
 |       உருக்கிய நற் பொன்னிடத்தே நவமணிகளும் செறியக் குயிற்றி     ஓவியப் பாவைகளாக்கிய அழகுவிளங்குகின்ற பலகைகளை உத்திரங்களிற்
 பொருத்தித் தெளிந்த ஒளியை விரிக்கும் வெள்ளிய படிகக் கற்களாற்
 சுவர்களை எடுத்தனர்.
 		| மேனிலை மாளிகை வேதி சூளிகை ஏனவும் பலபல இயற்றி மேவர
 வானெழும் இருசுடர் மணிக ளாதியால்
 ஊனமில் சிகரமும் உம்பர்ச் சூட்டினார்.            7
 |       மேற்றளங்களும், மாளிகைகளும், மேடைகளும், உச்சிமாடங்களும்,     பிறவும் மிகப்பலவாக வகுத்து விருப்பெழச் சூரியகாந்தக்கல், சந்திரகாந்தக்கல்
 ஆகிய இவற்றினால் குற்றமில்லாத சிகரங்களும் மேலிடத்தே அமைத்தனர்.
 		| காவியங் கண்ணியர் விழையுங் காமுகர் ஆவியுஞ் சிந்தையும் அழிய ஏக்கற
 ஓவியத் தொகையெலாம் உம்பர் மாதர்போற்
 பாவியல் பாடலிற் பயிலச் செய்தனர்              8
 |       நீலோற்பல மலரை ஒக்கும் கண்களையுடைய மகளிரை விரும்பும்    காமுகருடைய உயிரும் மனமும் அழியவும், ஆசையால் தாழவும் தேவமகளிர்
 பாடலிற் பயிலும் நிலையில் ஓவியங்களை அமைத்தனர்.
 		| வரையினின் றிழிதரு மாலை வெள்ளநீர் அருவியென் றயிர்ப்புற அலங்கு நித்திலக்
 குருமணி வடம்ஒளி கொழிக்குஞ் சுற்றெலாம்
 நிரைநிரை யாத்துமண் நீவ நாற்றினார்.           	9
 |       மலையினின்றும் இழியும் இயல்பினையுடைய வெள்ளப் பெருக்காகிய    அருவியே என்று ஐயத்துள் ஒருதலையே துணிய அசைகின்ற நிறமுடைய
 முத்த மாலைகளைச் சுற்றுப்புறங்களிலெல்லாம் வரிசை வரிசை யாகத் தூக்கித்
 தரையில் புரளத் தொடங்க விட்டனர்.
 		| மணிவடக் கிடையிடை மறுவில் கண்ணடி தணிவற ஒளிவிடுந் தவளச் சாமரை
 பிணிமலர்த் தொத்துவண் பிரசப் பல்கனி
 அணிபெறு முறைமையின் அலங்கத் தூக்கினார்.    10
 |  |