|      முத்து மாலைகளின் நடுவே நடுவே குற்றமில்லாத கண்ணாடிகளும், குறைவற ஒளி வீசும் வெண்சாமரைகளும், மலர்ப் பிணையல்களும்,
 தேனூறுகின்ற பல் பழங்களும் அழகு பெருகுகின்ற நிலைமையில்
 அசையத்தூக்கிக் கட்டினர
 		| நெட்டிலைக் கதலியும் நீலப் பூகமும் மட்டுமிழ் கன்னலும் வானில் தாருவும்
 விட்டொளி எரித்திருள் விழுங்கு தூண்தொறும்
 கட்டினர் மலர்கனி காய்கள் ஈனவே.            11
 |       விட்டு விட்டு ஒளி வீசி இருளைப் பருகும் தூண்கள் தோறும் நீண்ட இலைகளையுடைய வாழை மரங்களும், பசிய பாக்கு மரங்களும், சாறு
 பெருகுகின்ற கரும்புகளும், கற்பக முதலிய தருக்களும் ஆகிய இவை
 மலர்களையும், பழங்களையும், காய்களையும் ஈனுமாறு கட்டினர்.
 		| கொடிகளுந் தாருவுங் கோணைப் பொய்கையும் வடிவுடைக் கிளிபுறா மஞ்ஞை மற்றவும்
 சுடர்பல நிறங்களுந் தொகுத்தி லேகித்த
 விடுகதிர்ப் பட்டினால் விதானஞ் செய்தனர்.      12
 |       பூங்கொடிகளும், பூமரங்களும், கோணங்களமைந்த நீர் நிலைகளும், அழகிய கிளிகளும், புறாக்களும், மயிலும், பிறவும் ஒளியுடைப் பல
 நிறங்களையும் கூட்டிச் சித்திரித்த ஒளி வீசுகின்ற மேற்கட்டி தூக்கினர்.
 		| முத்தொளி மாலையும் மூரிப் பன்மணிச் சித்திர மாலையும் செம்பொ னாற்செயும்
 தத்தொளி மாலையும் ததைந்து வண்டுலாம்
 தொத்தலர் மாலையும் துவன்றத் தூக்கினார்.      13
 |       ஒளியுடை முத்து மாலைகளும், பெருமையமைந்த நவரத்தின    மாலைகளும், ஒளி தவழும் செம்பொன்னாலாகிய மாலைகளும், வண்டுகள்
 செறிந்துலாவும் கொத்துக்களில் அலர்கின்ற பூமாலைகளும் ஆகிய இவற்றை
 நெடுகத் தூக்கி யாத்தனர்.
 		| நாப்பணின் எம்பிரான் நங்கை யோடுறை பூப்பொலி மணியணை பொருத்திப் பாங்கெலாம்
 மூப்புடை விண்ணவர் முனிவர் வைகிட
 ஏற்புடை அணைகளும் இட்டு வைத்தனர்        	14
 |       அம்மண்டபத்தின் நடுவில் எமது பெருமான் உமையம்மையாரொடும்     உடனுறைதற்கு மலர்களாற் பொலியும் அழகிய தவிசமைத்துப்
 பக்கங்களிலெல்லாம் உயர்வுடைய தேவரும் முனிவரும் பிறரும் இருந்திட
 அவரவர்க்குத் தக்க இருக்கைகளையும் கொணர்ந்திட்டனர்.
      மூப்பு-உயர்வு; ‘விண்ணோர்க்கெல்லாம் மூப்பாய்’	 |