| மேற்படி வேறு	 		| யவனர் தந்தொழில் இத்திற மாகமற் கவுரி மன்ற லெனக்கறங் கும்பணைச்
 சிவம்ம லிந்த செழுங்குரல் கேட்டலும்
 உவகை பூத்தனர் ஒள்நகர் மாக்களே.            	19
 |       தேவதச்சர் தமது செய்கை இவ்வாறாகக் கவுரியம்மையாரின் திருமணம்     என்னும் மங்கலம் மிகுந்த செழுவிய திருவார்த்தையைப் பறை அறைவித்துக்
 கூறக் கேட்ட அளவே ஒள்ளிய நகர மக்கள் மகிழ்ச்சி பூத்தனர்.
 நகரணி நலம்	 		| இயங்கு மாந்தர் நெருக்கினில் இற்றுவீழ் தயங்கு காழ்களும் தாரும் புலவியின்
 முயங்கு மாதர் உகுத்தவும் மொய்த்தொளி
 வயங்கு வீதியிற் குப்பைகள் மாற்றுவார்.          20
 |       நடக்கின்ற மக்களின் நெருக்கத்தில் அற்றுவீழ்ந்த அசைகின்ற     மணிவடங்களும், பூமாலைகளும், ஊடற் காலத்தில் உணங்குகின்ற மகளிர்
 சிதறியவும் செறிந்தொளி விளங்குகின்ற வீதிகளிற் குப்பைகளாகப் போக்கித்
 தூய்மை செய்வார்.
 		| சந்தம் மல்கு தமனியச் சுண்ணமுஞ் சுந்த ரக்கருப் பூரத் துகள்களும்
 கந்த நீரிற் கரைத்து மறுகெலாம்
 பந்தின் ஊட்டிப் பனிப்பர்க ளென்பவே.          21
 |       அழகு மிகுகின்ற பொற் பொடிகளையும், அழகிய கருப்புரப்    பொடிகளையும் வாசனை வீசுகின்ற பனிநீரிற் கரைத்து விதிகளிலெ்லாம்
 மட்டத்துருத்தியால் குளிரச் செய்வர்.
 		| வண்டு லாமலர் வார்மணிப் பந்தரும் விண்டு ழாவு பதாகையும் வில்மணி
 கொண்ட தோரணக் கூட்டமும் யாணரிற்
 பண்டை யுள்ளன பாற்றி இயற்றுவார்            22
 |       வண்டுகள் உலாவுகின்ற நீண்ட அழகிய மலர்ப்பந்தர்களும், வானில்     அசைகின்ற கொடிகளும், ஒளியுடைய மணிகள் பதித்த மகர தோரணங்களும்
 ஆகிய இவற்றை முன்னைய என நீக்கிப் புதுமையாகக் கோடிப்பர்.
 |