| கலி விருத்தம்	 		| ஆர்த்தன பணிலங்கள் ஆர்த்த துந்துமி ஆர்த்தன பல்லியம் ஆர்த்த மங்கலம்
 ஆர்த்தன நான்மறை ஆர்த்த ஆகமம்
 ஆர்த்தன பல்கலை ஆர்த்த வாழ்த்தொலி.        61
 |       ஆர்த்தன சங்கங்கள்; ஆர்த்தன துந்துமிகள்; ஆர்த்தன பலவகை    இயங்கள்; ஆர்த்தன மங்கலப் பாடல்கள்; நான்கு மறைகளும். ஆர்த்தன
 ஆகமங்கள்; ஆர்த்தன பல் புராணங்களும் பிறவும். ஆர்த்தன
 பல்லாண்டுகளும் வாழ்த்துரைகளும்.
 		| பொழிந்தனர் வானவர் கற்பப் பூமழை வழிந்தன பாடலின் மதுரத் தேமழை
 இழிந்தன அடியவர் இணைக்க ணீர்மழை
 அழிந்தன வினையெலாம் அனைய காலையின்      62
 |       தேவர் கற்பகப் பூமழையைச் சொரிந்தனர். இசைப் பாடல்களின் சுவை    மிக்க இனிய கீதம் வடிந்து வழிந்தன. அடியவர்தம் இருகண்களும் நீர்
 அருவியாக இழிந்தன. வினைத் துன்பங்கள் யாவும் அக்காலை அழிந்தன.
 		| பங்கயக் கிழவனைப் பகர்ந்த நூல்முறை செங்கனல் வளர்ப்ப அங் கருளிச் சேவுடை
 அங்கணன் மலைமகள் மிடற்றில் ஆரருள்
 மங்கல நாணினை வயங்கச் சாத்தினான்.        	63
 |       நூல்களின் விதித்த முறையால் பிரமனை வேள்வி செய்யத்     திருவாணையிட்டு அது செய்கையில் எரிமுன்னர் விடையை ஊர்தியாக
 வுடைய அங்கணர் உமையம்மையார் திருக்கழுத்தில் அருள் வடிவாகிய
 திருமங்கலக் கயிற்றினை வயங்கச் சாத்தினர்.
 		| முண்டகக் கடவுளும் முதல்வன் ஆணைஉட் கொண்டுவே தாகமக் குறிவ ழாவகை
 மண்டிய கொழுங்கனல் வளர்த்து வாசநெய்
 மொண்டுதூய்க் கடிவினை முற்றச் செய்தனன்.     64
 |       தாமரையோனும் முதல்வர்தம் கட்டளையை மனத்திற் கொண்டு     நூல்களில் விதித்தபடி செறிந்த வளவிய தீயை ஓம்பி மணமுடைய நெய்யை
 முகந்து பெய்து திருமணச் செயலை முற்றுவித்தனர்.
 		| மாண்டசெந் தமிழ்முனி மனக்க ருத்தொடு காண்டகு கவுரிதன் கருத்து முற்றின
 வேண்டிய வேண்டியாங் களிக்கும் மெய்யருள்
 ஆண்டகை விளக்கினான் போலும் அற்றைநாள்.   65
 |  |