|      மாட்சிமையுடைய செந்தமிழ் முனிவராகிய அகத்தியர் திருவுள்ள    நினைவும் அழகு தக்கிருக்கும் கவுரியாகிய அம்மையார் திருவுள்ளக்
 கருத்தும் முற்றுப் பெற்றன. வேண்டியவற்றை வேண்டியவாறே வழங்கும்
 மெய்யருளை அந்நாள் ஆண்டகையார் விளக்கினார் போலும்.
 கலிநிலைத் துறை	 		| திரும ணத்திறங் கண்டவர் யாவருஞ் செழுந்தேன் பருகு வண்டென ஆனந்த வெள்ளத்திற் படிந்தார்
 உருகி ஏத்தினர் கையிணை உச்சியிற் குவித்தார்
 இருக ணீர்மழைத் தாரையின் மூழ்கிஇன் புற்றார்.   66
 |       திருமணக் காட்சிகளைக் கண்டவர் யாவரும் வளமுடைய தேனைப்    பருகிய வண்டெனப் பேரின்பப் பெருக்கில் மூழ்கினர்; உள்ளம் கரைந்து
 போற்றினர்; இருகைகளையும் தலைமிசைக் கூப்பினர்; இருகண்கள் பொழிந்த
 நீர்ப்பெருக்கில் திளைத்து இன்பம் மிக்கனர்;
 		| மலைக்கொ டிக்குறு கவுரமெய் வடிவும்வள் ளலுக்கிம் முலைச்சு வட்டொடு வளைத்தழும் பணியும்முன் நோக்கிச்
 சிலைத்த டம்பனி வரைமிசைத் திகழ்மணக் கோல
 நிலைக்கு மற்றிது ஏற்றம் இங் கெனநெடி துவந்தார்.     67
 |       இமயவல்லியார்க்கு உண்டாகிய பொன்னிறத் திருமேனியையும்,    முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணியாக வள்ளலார்க்கு வாய்த்தமையின்
 இவற்றையும் முனைத்து நோக்கி இமயமலையில் நிகழ்ந்த திருமணக்
 காட்சியினும், அம்மையார் பொன்னிறமும், திருவேகம்பர் சுவடுகளும்
 முன்னில்லனவாய் இப்பொழு துண்மையின் ஏற்றமுடைத் திது என்றொப்பு
 நோக்கிப் பெரி துவந்தனர்.
 		| அலகில் ஓகையில் திளைப்பஇப் பேறெமக் களித்த மலைய மாமுனி வாழிய வாழிஎன் றுரைத்தார்
 குலவு மங்கலம் பாடினர் ஆடினர் குழைந்தார்
 தலைவி பாகனும் அவரவர் தமக்கருள் வழங்கி.    68
 |       அளவில்லாத பெருமகிழ்ச்சியில் படியுமாறு இப் பேற்றினை     எமக்கருளிய அகத்தியர் என்றென்றும் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தினர்.
 விளங்கு மங்கலம் பாடினர்; கூத்தாடினர்; அன்பினால் குழைந்தனர்.
 அம்மையைப் பாகங் கொண்டவரும் யாவர்க்கும் திருவருளை வழங்கி,
 இறைவன் திருவுலாப் போதல்	 		| எட்டு மாதிரக் கரிகளும் உடல்பனிப் பெய்த நெட்டு யிர்ப்பெறி மதுகைவெள் விடைமிசை நீல
 மட்டு லாங்குழல் மடவர லொடுமகிழ்ந் தேறிச்
 சிட்டர் போற்றிட மறுகிடைத் திருவுலாப் போந்தான்.   69
 |  |