| 		| வீதி வாய்த்திரு விழாவணி தொழுதிடப் போந்த பேதில் பேரிளம் பெண்முடி வாயபல் பருவ
 மாதர் யாவரும் நாணொடு வளைகலை தோற்றுக்
 காதல் வேள்சிலைப் பூங்கணை மாரியிற் குளிப்ப.  	74
 |       திருமணக்கோலத்தைத் தொழுதிட வீதியிற் போந்த பேதை முதலாக    மாறுபாடில்லாத பேரிளம் பெண் ஈறாக எண்ணப்படும் எழுவகைப்பருவ
 மகளிர் யாவரும் உடன் பிறந்த நாணத்தையும், வளையையும், மேகலை
 முதலானவற்றையும் இழந்து காதலையூட்டும் மன்மதன் கரும்பு வில்லின்
 வைத்து எய்யும் மலரம்பு மழையில் மூழ்கவும்,
 		| புதிய சாமரை வெண்குடை பூங்கொடி மிடைய எதிரில் கொள்கையின் நகர்வலங் கொண்டெழுந் தருளி
 மதுர மென்மொழி மங்கல வாழ்த்தொலி மலியக்
 கதியி லார்க்கெலாம் இன்னருட் காட்சிதந் தளித்து.   75
 |       சாமரை, வெண்குடை, கொடிகள் செறியவும் ஒப்பில்லாத செய்கையின்     நகரை வலமாகச் சூழ்ந்து கொண்டு எழுந்தருளி இனிய மென்மொழியால்
 மங்கல வாழ்த்தொலி மல்கக் கடைப்பட்டவர் அன்றி நடையில்லார்
 யாவர்க்கும் காட்சியளித்து.
 இறைவன் தேவர்கட்கு வரமருளல்	 		| மீண்டு கோயிலி னுள்ளெழுந் தருளிமெல் லணைமேல் மாண்ட மெல்லியற் பனிவரை அணங்கொடும் வைகி
 ஆண்டு நின்றமா லயன்முதல் யாரையும் நோக்கி
 ஈண்டு நீர்வரம் வேண்டுவ கொண்மின்என் றிசைத்தான்.  76
 |       மீண்டு கோயிலினுள் எழுந்தருளி மெத்தென்ற தவிசில் மாட்சிமைப்பட்ட    மெல்லிய இயல்பினையுடைய இமாசல மன்னன் புதல்வியாரொடும் வீற்றிருந்து
 சந்நிதியில் நின்ற திருமால் அயன் முதலானோர் யாவரையும் பார்த்து
 ‘இப்பொழுது நீவிர் விரும்பியவற்றைப் பெற்றுக் கொண்மின்’ என்றருளினர்.
 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| இருமுது குரவர் பாதம் இமையவர் வணங்கி இந்தத் திருமணங் காண்டல் பெற்றேம் உய்ந்தனந் திரைநீர் வைப்பின்
 மருவினர் வதுவை செய்யும் இடந்தொறும் மன்னி ஆங்காங்
 கிருநலம் உதவல் வேண்டும் இவ்விரு வீரும் என்றார்.      77
 |       அம்மையப்பர் திருவடிகளைத்தேவர் வணங்கி ‘இந்தத் திருமணத்தைக்    காணும் பேற்றினை உடையேம் ஆயினேம். ஆகலின், கடைத்தேறினோம்.
 கடல் சூழுலகில் வைகித் திருமணஞ் செய்யப் பெறும் இடந்தொறும்
 எழுந்தருளி அங்கங்கே பெருநலங்களை வழங்கல் வேண்டும் இம்மணக்
 கோலம் பூண்ட இருவீரும்’ என வேண்டினர்.
 |