அற்புத இலிங்கங்கள் தீண்டில் யாவையுஞ் செய்யபொன் னாக்குவ திறலின் மாண்ட சித்தர்கள் எண்ணிலர் வழிபடப் படுவ வேண்டில் என்னவும் அளிப்பன மெய்த்தவ முடையோர் காண்ட கும்பல இலிங்கம்அக் கடிநகர் உளவால் 3 | யாதோர் பொருளையும் பரிசித்தால் அதன் இயல்பினை மாற்றிப் பொன் ஆம்படி செய்வனவும், வல்லமையால் மாட்சிமைப்பட்ட சித்தர்கள் அளவிலார் வழிபடப்படுவனவும், விரும்பிய பொருள் எத்திறத்தன ஆயினும் வழங்குவனவும் உண்மைத் தவமுடையோர் காட்சிக்கே புலனாவனவுமாகிய இலிங்கங்கள் பல அக்காவ லமைந்த நகர்க்கண் உள்ளன. ஒருத னிப்பொருள் இருதிற னாகிஉவ் விரண்டும் ஒருமை யுற்றிடும் வியப்பும்அங் குள்ளது விரிக்கில் ஒருப ரம்பொருள் சிவனொடு சத்திஎன் றிரண்டாம் ஒருமை யுற்றிடும் உமையவள் கம்பரைத் தழுவி 4 | ஒப்பற்ற ஒரு பொருள் இருபகுப்பாகி அவ்விரண்டும் பின்பு ஒன்றுபடும் அதிசயமும் அங்குள்ளது. அதனை விரித்துரைக்கில் ஒப்பற்ற பரம் பொருள் சிவமும் சத்தியுமென இரண்டாய் அச்சத்தியாகிய உமையம்மையார் பின்பு திருவேகம்பரைத்தழுவி ஒன்று படும்படி விளங்கும். இருமை ஓர்பொருள் எண்ணில வாதலும் எண்ணில் பொருள்கள் ஒன்றெனத் திகழ்தலும் உடைத்தது புகலின் ஒருசி வச்சுடர் பற்பல வடிவுகொண் டுறையும் மருவு பன்மறை ஒருதனி மாவென வயங்கும் 5 | இருதன்மை (சச்திசிவம்) யுடைய ஓர் பொருள் எண்ணில்லாதன ஆதலும் அளவில்லாத பொருள்கள் ஒரு பொருளாய்த்தோன்றுதலும் அங்குடைத்து. விளக்கிச் சொன்னால். ஒன்றாகிய சிவபரஞ்சுடர் பற்பல வடிவங்கள் கொண்டு வீற்றிருக்கும், பலவாய் மருவும் மறைகள் ஒப்பற்ற தனி மாமரமாய் விளங்கும். பதினோ ரற்புதம் மற்று மூன்றிடம் வேதிகை வயல்கள்நாற் றவிசு பொற்ற ஐந்தருத் தடம்அறு புட்கள்ஏழ் பொதியில் பற்றும் எண்பொய்கை ஒன்பது சிலைபொழில் பத்தாங் கொற்ற மன்றுபத் தோடொரு கூவலுங் குலவும். 6 | மேலும், மூன்றிடங்கள், மூன்று திண்ணைகள், மூன்று வயல்கள், நான்கு தவிசுகள், ஐந்து தருக்கள், ஐந்து தடாகங்கள், ஆறுபறவைகள், |