| விளங்க அணிந்து செயத்தக்க தொண்டுகள் பலவற்றையும் செய்து மாவடியில்    முளைத்த பரஞ்சுடரை வழுவாது தொழுது வாழ்வார்.
 கலி விருத்தம்	 		| வற்றரு மறைஅவ்வா றோதி வாழ்க்கையிற் பற்றில னாயிடிற் குரவன் பால்என்றும்
 உற்றினி துறைகபற் றுடைய னேயெனில்
 பெற்றியின் அருட்குரு இசைவு பெற்றரோ.         15
 |       தழைத்த மறைகளை மேலே கூறியவாறு கற்று இல்லற வாழ்வில்    விருப்பிலன் ஆயின் ஆசாரியனிடத்துத் தங்கி வாழ்க. விருப்புடையன்
 ஆயின் உரிய முறையின் அருட்குருவின் சம்மதத்தைப் பெற்று,
 		| கடவுளர் பிதிரர்தங் கடன்கள் நீக்குவான் வடுவறும் இலக்கணம் மாண்ட கற்பினின்
 மிடலுடைக் கிழத்தியை விதியின் வேட்டுப்பின்
 நெடுமனை வாழ்க்கையின் ஒழுகல் நீதியே.         16
 |       தேவர், தென்புலத்தார் தம் கடன்களை முடித்தற் பொருட்டுக்     குற்றமற்ற இலக்கணத்தால் மாட்சிமையுடைய கற்பினால் திண்ணிய
 உரிமையை விதிப்படி திருமணம் புரிந்துகொண்டு மனை அறத்தில் ஒழுகுதல்
 முறையே.
 		| கருதுமுப் பதிற்றிரு கவள மென்பதம் இருபொழு துண்டலும் எச்சம் ஐவகை
 புரிதலும் விதித்தநாள் மனைவி பூண்முலை
 மருவலும் இனையவும் இவர்க்கு மாணுமே.         	17
 |       ஒரு வேளைக்கு முப்பத்திரண்டு கவளமாக இருவேளை உணவு    கொள்ளலும், ஐவகை வேள்வியை யியற்றலும், விதித்த நாட்களில்
 மனைவியொடு கலத்தலும் ஆகிய இவை இவர்க்குச் சிறக்கும்.
 		| ஓதெரி சமிதையின் ஓம்பல் தெய்வமாம் ஏதமில் பிதிரருக் கீதல் அன்னதாம்
 பூதருக் கிடுபலி பூத எச்சமே
 வேதியர்க் கோதனம் வீசல் மானிடம்.             18
 |       விதித்த சமித்துக்களைக் கொண்டு வேள்வி செய்தல் தேவயாகம்.    துன்பில்லாத தென்புலத்தார்க்குத் தருப்பணம் செய்தல் பிதிர்யாகம், பலியிடல்
 பூதயாகம், பிராமணர்க்குச் சோறு வழங்கல் மானுட யாகம்,
 |