| 		| பெருமறை ஓதுதல் பிரம எச்சம்இவ் விருமகம் ஐந்தனுட் பிரம எச்சந்தான்
 திருமிகச் சிறத்தலில் தெய்வ வேதியர்
 ஒருதலை யாகஈ தோம்பல் வேண்டுமால்.          19
 |       வேதம் ஓதுதல் பிரமயாகம் எனப்படும் இவ்வைந்து வகையுள்     பிரமயாகம் தெய்வத் தன்மை மிக்கமையால் தெய்வத் தன்மையையுடைய
 பிராமணர் துணிவாக இதனைக் கடைப்பிடிக்கவேண்டும்.
 		| வைகறை எழுந்துசெய் வினைகள் மாண்டகச் செய்துமா நகர்ப்புறத் தொழுகுந் தெய்வநீர்
 எய்தினர் குடைந்துவெண் டுகில்இ ரண்டுடுத்
 தைதுறு கண்டிகை நீற ணிந்துபின்.               20
 |       விடியற் காலையில் துயிலெழுந்து காலைக் கடன்களை முடித்த    பின்பு பெரிய நகரின் மருங்கே ஓடும் ஊறும் நதி முதலிய தீர்த்தங்களை
 அடைந்து மூழ்கி வெள்ளிய ஆடை இரண்டனை உடுத்து அழகு மிகும்
 உருத்திராக்கமும் திருநீறும் அணிந்ததன் பின்,
 		| வண்புதல் தருப்பைமேல் வைகி மும்முறை ஒண்புனல் வேதங்கள் உவப்ப ஆசமித்
 தெண்பெற வாய்துடைத் தியல்பில் தீண்டியே
 பண்பயில் மறைகள் படித்தல் வேண்டுமால்.        21
 |       தருப்பாசனத்தில் இருந்து வேதங்கள் மகிழத் தெய்வநீரை ஆசமனம்    செய்து கருத்துடன் வாயைத் துடைத்துத் தொடுமிடங்களை மந்திரத்துடன்
 மோதிர விரலால் தொட்டுச் சந்தத்துடன் கூடிய வேதங்களை ஓதுதல்
 வேண்டும்.
 		| மாதவப் பேற்றினான் மறைகள் அண்ணலைச் சூதமாய் நிழற்றிலின் தொல்லை ஏகம்ப
 நாதனுக் கினியதிப் பிரம நன்மகம்
 மேதகும் அறங்களுள் மிக்க தாகுமால்.           	22
 |       பெருந்தவப் பயனால் வேதங்கள் பெருமானுக்கு மா மரமாய் நிழல்    செய்தலின், இப்பிரமயாகம் (வேதம் ஓதல்) திருவேகம்பப் பெருமானுக்கு
 உவப்பாவது. மேன்மை பொருந்திய அறங்கள் பலவற்றுள்ளும் தலையாயதும்
 ஆகும்.
 		| ஆற்றலுக் கியையஎவ் வளவைத் தாயினும் போற்றரு மறையினைப் போற்றி மேதகச்
 |  |