| 		| சாற்றுகா யத்திரி சதவு ருத்திரம் ஏற்றஐந் தெழுத்திவை விதியின் எண்ணியே.       23
 |       தத்தமக்கு முடிந்த நிலையில் எத்துணைச் சிறு பொழுதாயினும்    துதித்தற்கரிய வேதங்களை ஓதி எடுத்தோதப்படும் காயத்திரி சத வுருத்திரம்,
 இயைந்த பஞ்சாக்கரம் இவற்றை விதித்தபடி கணித்து,
 		| அனைத்தினும் நிறைந்துறை அடிகள்பூசனை தனக்குறு திருப்பள்ளித் தாமங் கொய்துபோய்
 மனைத்தலை வைத்துமேல் வாழ்க்கைக் கேய்ந்தன
 எனைத்துள கருமமும் இயல்பின் நாடியே.         	24
 |       எவற்றினும் நிறைந்துறையும் சிவபிரானார் பூசனைக்குத் தக்க     திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்களைக் கொய்துகொண்டு போய் மனையில்
 தொடுத்தற்குரிய இடத்தில் வைத்து மனைவாழ்க்கைக்கு வேண்டும் எவ்வகைச்
 செயல்களையும் ஒழுங்குபட ஆராய்ந்து முற்றுவித்து,
 		| கதிரவன் உச்சியி னணுகுங் காலையின் முதுசிவ கங்கைநீர் முறையின் மூழ்குபு
 மதியுறு நியதிகள் முடித்து மாநிழல்
 அதிபனை முறையுளி அணைந்து போற்றியே.       25
 |       உச்சிப்போதில் அறிவுருவான சிவகங்கையில் முறைப்படி மூழ்கி     மதிப்புடைய நியமங்களை முற்றுவித்துத் திருவேகம்பப் பெருமானை
 விதிப்படி அடுத்துப் பரவி,
 		| மீண்டுதன் மனைவயின் மேவித் தற்பொருட் டீண்டிய அருட்குறி இறைவன் அர்ச்சனை
 பூண்டபே ரன்பினிற் புரிந்து பூசனைக்
 காண்டுறுப் பெனப்படும் அழலும் ஓம்பியே.        26
 |       திரும்பித் தன் மனையைச் சேர்ந்து ஆன்மார்த்தமாக எழுந்தருளி     யுள்ள சிவலிங்க பூசனையைப் பேரன்பினால் செய்து அப்பூசனைக்
 கங்கமாகிய சிவாக்கினியையும் வழிபாடு செய்து,
 		| அறமுதல் இழிஞர்ஈ றான வற்றினுக் குறுபலி உதவிஊங் கெச்சம் ஐவகை
 முறையுளி யாற்றிஅவ் வேலை முன்னிய
 பெறலரு விருந்தினர் பேணி ஊட்டியே.          	27
 |  |