நடுவிலும் பனிக்காலங்களிலும் நீருளும் நின்று தவம்செய்து நெகிழ்ந்த உள்ளத்தனாகி உஞ்சவிருத்தி பெற் றுண்டு தங்குக. கண்டிகை நீறு தாங்கிக் கம்பனைக் காம நோக்கின் ஒண்டொடிப் பிராட்டி தன்னை உன்னிஅஞ் செழுத்தும் எண்ணி அண்டர்கோன் பூசை யாற்றி அன்னணம் வதிந்த பின்னர் மிண்டரும் வனத்தின் வாழ்க்கை மெய்த்தவ முதிர்ச்சி யாலே. 54 | உருத்திராக்கம் விபூதி இவற்றைத் தரித்துத் திருவேகம்பரைப் பெருமாட்டியொடும் நினைந்து திருவைந்தெழுத்தைச் செபித்துத் தேவதேவன் பூசனையைப் புரிந்து அவ்வாறு வதிந்த காலை வானப்பிரத்த வாழ்க்கையில் உண்டாகிய உண்மைத் தவத்தின் முற்றுப் பேற்றினாலே, அற்றமில் அறிவில் தூய ராகிஇவ் வுலக வாழ்வும் பொற்றபூங் கமல வாழ்க்கைப் புண்ணியன் முதலோர் வாழ்வும் பற்றற வெறுத்து வீட்டின் அவாவுறும் பான்மை பெற்றான் முற்றுறத் துறவின் எய்தி முறைமுடி புணர்தல் வேண்டும். 55 | குற்றமற்ற அறிவுடைமையால் மனந் துயராகி இவ்வுலக வாழ்க்கையிலும், பிரமபதம் முதலாம் பதங்களிலும் உள்ள பற்றினை முற்றவும் வெறுத் தொழித்து வீடு பேற்றில் விருப்புமிகும் இயல்பினைப் பெற்றவன் (சந்நியாசம்) முழுத் துறவினை எய்தி வேதாந்தப் பொருளை உணர்தல் அவசியம். ஐந்தவித் துயர்ந்த ஆசான் றன்புடை அருள்நூல் கேட்டுச் சிந்தனை செய்து மாணத் தெளிந்துபின் நிட்டை மேவும் இந்தவா றடைவின் எய்தும் இயல்பினைத் தலைநின் றேறூர் அந்தணன் இருதாள் என்றும் அகந்தழீஇ ஒழுகல்ஆறே. 56 | ஐம்புலன்களை வென்றமையால் உயர்ந்த ஆசாரியனிடத்து அருள் நூலைக் கேட்டுச் சிந்தித்து மிகத் தெளிந்து பின் நிட்டை கூடும் இவ்வியல்பினை ஒன்றன்பின்னொன்றாக அடையும் நிலையைத் தலைப்பட்டு விடையூரும் பெருமானார்தம் திருவடிகளை என்றும் உள்ளத்துள் தழுவி ஒழுகலே முறையாகும். அடற்கொடும் பாசம் மாற்றிப் பசுக்களை அருள்வீட் டுய்ப்பப் படைத்தளித் தழித்து நோக்கும் பரம்பொருள் சிவனே என்றல் உடற்றுநர்க் கரிய வேத உள்ளுறை யாவ தென்னத் தொடக்கம்ஈ றெழுவா யான இலிங்கத்தால் துணிதல் கேள்வி. 57 | வலியுடைய கொடிய மலங்களின் வலியைக் கெடுத்து ஆன்மாக்களை முத்தியிற் செலுத்தும் பொருட்டுப் படைத்துக் காத்து அழித்து 94 |