| 		| மெய்யன் ஆலயப் பணிஉடல் விருத்தியைக் குறித்துச் செய்து ளோர்பெறும் பயனும்ஒண் மகமெலாஞ் செய்தார்
 எய்து மாறரி தென்றிடில் உறுதியோ டியற்றும்
 உய்தி யாளருக் குரைத்திட வேண்டுவ தெவனோ.      55
 |       சத்தியனாகிய சிவபிரானார் தம் திருக்கோயிலைக் கூலியின் பொருட்டுக்     கட்டினவர் எய்தும் பயன் அளவு விதிப்படி யாகங்கள் பலவும் செய்த
 புண்ணியரும் பெறார் எனின் துணிவுடையராய்க் கோயிலை வகுத்த உய்யத்
 தக்கவர்தம் பயனை உரைக்குமாறு அரிதென்க.
 		| எட்டுச் செங்கலி னாயினும் ஈர்ம்புனல் வேணி வட்டச் சென்னியான் ஆலயத் திருப்பணி வகுத்தல்
 ஒட்டிப் பெற்றஇவ் வுடற்பய னாவதென் றுணர்வீர்
 அட்டுத் தீவினை ஐந்தவித் தொழுகும்அந் தணர்காள்.   56
 |       தீவினையைக் கெடுத்து ஐம்பொறிகளை அடக்கி மெய்ந்நெயிற்     செல்லும் அந்தணீர், கங்கையை வட்டமாகிய சடையிடை வைத்த பிரானார்க்கு
 எட்டுச் செங்கல் கொண்டாயினும் விளையாடும் சிறுவரை ஒப்பச் சிவாலயம்
 வகுத்தலே இவ்வுடம் பெடுத்ததன் பயனென அறிமின்.
 		| ஏற்றின் மேலவன் ஆலயத் திருப்பணி இயற்றும் ஆற்றல் இல்லருங் கோயிலின் அகம்புறம் எங்கும்
 போற்றி நுண்ணுயிர் மெல்லென அலகிடல் புரிதல்
 நூற்று நூறுசாந் திராயண கிரிச்சரம் நோக்கும்.       57
 |       விடையூரும் விமலர்க்கு ஆலயம் எடுத்தற்கு வேண்டும் ஆற்றல்     இல்லாதவரும் கோயிலின் அகத்திலும் புறத்திலும் நுண்ணிய உடம்புடைய
 எறும்பு முதலாம் இனங்களுக்கும் தீங்கு நேராதவாறு மெத்தென விளக்குமாறு
 கொண்டு திருவலகிடுதல், பதினாயிரம் சாந்திராயண விரதம், கிரிச்சரவிரத
 பயன்களை ஒக்கும்.
 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| குடம்புரை செருத்தல் தீம்பால் கொழித்திடுங் கபிலை ஆப்பி இடம்படும் விசும்பின் ஏந்தி வடித்தநீர் வாக்கி என்றும்
 அடம்பணி சடிலத் தெங்கோன் ஆலயம் மெழுகு வோர்க்குப்
 படும்பயன் அதனின் நூறு மடங்கெனப் பகரும் நூல்கள்.    58
 |       குடமொக்கும் மடியினின்றும் இனிய பாலைப் பொழியும் கபிலை     என்னும் புண்ணியப் பசுவின் (மலம்) சாணத்தைக் கீழே விழாமல் ஏந்தி
 வடிகட்டிய நீரைக்கொண்டு கரைத்து அடம்பம் பூவை முடியில்
 |