|      மந்தார மலரில் இந்திரனும், பொலிவுடைய ஊமத்தம் பூவில்     குபேரனும், நாயுருவில் இயமனும் விரும்பி உறைவர். தாமரை மலரில்
 சிவபெருமான் மேவுவர், பசிய மகரந்தமுடைய நீலோற்பல மலரில்
 உமையம்மையார் விரும்பி உறைவர்.
 		| மேதகு வாசத் தெல்லாம் மலைமகள் விரும்பி வைகும் ஆதலால் இனைய பூக்கள் அமைந்தவைக் கொண்டு செய்யும்
 பாதபூ சனைக்கே கம்பப் பரம்பொருள் கருணை கூரும்
 போதணி புயத்தின் மேலாம் பூங்தொடை தொடுத்துச் சாத்தல். 	63
 |       மேன்மை பொருந்திய நறுமணப் பூக்கள் எவற்றிலும் உமையம்மையார்     உவந்துறைவர் ஆகலின் இத்தகைய மலர்களையும் தழைகளையும்
 வாய்த்தவற்றைக் கொண்டு அடிமலரில் அருச்சித்தற்குத் திருவேகம்பப்
 பெருமான் பேரருள் சுரக்கும், மலரணிதற்குரிய திருத்தோளில் மாலை
 தொடுத்துச் சாத்துதல்,
 		| அவற்றினும் அதிக மாகும் அலர்ந்தபுண் டரிக மாலை எவற்றினுஞ் சிறந்த மேன்மை எழிற்கருங் குவளைப் போது
 நிவப்புறு நூற்றுப் பத்தால் நெடுந்தொடை மாலை சாத்திற்
 பவத்தொகை இரிய நூறி முத்தியே பயக்கும் அம்மா.      64
 |       முற்கூறிய முறையினும் மிக்குப் பயன் தரும். தாமரை மலராலும்     எவற்றினும் சிறந்த நீலோற்பல மலரானும் உயர்வுற ஆயிரம் மலர்களால்
 மாலை தொடுத்துப் பெருமானார்க்கும் பெருமாட்டியார்க்கும் சாத்தினால்
 பிறவி நோயை முற்றும் கெடுத்து முத்தியையே வழங்கும்.
 		| ஓங்குயர் திருவே கம்பம் உடையவன் திருமுன் வாசம் வீங்குநெய் விளக்குத் தூபம் விளைத்திடின் முருகு நாறிப்
 பாங்கொளி பரப்பு மேனி படைத்துவெண் கயிலை நண்ணித்
 தேங்கருட் பரமானந்த வேலையுள் திளைத்து வாழ்வார்.   	65
 |       திருவேகம்பப் பெருமான் திருமுன்னர் மணமிகும் நெய் தீபமும்,     நறும் புகையும் பணிபுரிந்தால் நறுமணங்கமழும் ஒளியுடைய உடம்பினராய்க்
 கயிலையை அடைந்து அருளுடைய பரமானந்தத்தில் மூழ்கி வாழ்வார்.
 		| மட்டவிழ் பொழில்சூழ் கம்ப வரைப்பிடை மதிதேய் பக்கத் தட்டமி பதினான் கான தினங்களின் அன்பு கூர்ந்து
 கட்டெழிற் கபிலை ஆன்நெய் கலந்தகுங் கிலியத் தூபம்
 இட்டவர் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் எங்கோன்.   66
 |  |