| 		| பூக மும்பசும் பொற்குலை வாழையும் மாக முந்திட நாட்டி வயக்கிய
 போகு பந்தரும் பூரண கும்பமும்
 ஏகும் அவ்விடந் தோறும் இலகிட.              82
 |       பாக்கு மரங்களும், குலையுடைய வாழைகளும் விசும்பு பிற்படத்     தூக்கி விளங்க வகுத்த மிக்குயர்ந்த பந்தர்களும் நிறைகுடங்களும்
 செல்லுமிடமெல்லாம் விளங்கவும்,
 		| வளிஉ லாமதர் மாளிகை சூளிகை குளிர்கொள் மண்டபங் கோபுர மீதெலாம்
 நளிம லைத்தலை நன்கொடி பூத்தெனக்
 களிம டக்கொடி யார்கஞ லித்தொழ.             83
 |       காற்று வழங்கும் சாலேகங்களையுடைய மாடங்களும் மேல்    தெற்றிகளுடைய குளிர்ச்சி வாய்ந்த மண்டபங்களும், கோபுரங்களும் ஆகிய
 இவற்றின்மேல் பெருமை பொருந்திய மலைமிசை நல்ல கொடிகள் பூத்து
 விளங்கினாற்போல உறுப்பெல்லாம் மலர்களை ஒக்கும் கொடிபோல்வார்
 செறிந்து தொழவும்,
 		| குங்கு மக்குழம் புங்குளிர் சாந்தமும் பொங்கு வாசப் புதுப்பனி நீரொடு
 வெங்கண் மங்கையர் பந்தினில் வீசுவ
 எங்கும் மல்கி அடிகள் இழுக்குற.               84
 |       குங்குமக் குழம்பும், குளிர்ந்த சந்தனச் சேறும் மிக்குக் கமழும்     பனிநீரொடும், கொடிய பார்வையையுடைய மகளிர் நீர்வீசுந் துருத்தியால்
 வீசுதலின் தெருவிடங்கள் எவ்விடத்தும் செல்வோர் அடிகள் வழுக்குறவும்,
 		| முடிகள் தம்மின் அராவி முழுமணி படியில் உக்கன பாறினங் கொண்மின்என்
 றுடைய மாந்தர்க் கறிவுறுத் தாங்கவர்
 அடிகள் பைதுறுத் தங்கங் கவிர்தர.              85
 |       முடியொடு முடிதாக்கிப் பதித்திருக்கும் நிறைமணிகள் வீழ்ந்து    கிடந்தனவாய் யாம் சிதறினம் கொள்ளுங்கோள் என்று மணிக்குரியவர் தமக்கு
 உணர்த்துவனபோல அவர் அடிகளில் உறுத்தி ஆங்காங்கு ஒளிவிடவும்,
 		| இளிந்த பூகத் திருங்கனி வெள்ளிலை ஒளிர்ந்த பொன்மணி ஒண்பொரி பன்மலர்
 |  |