| 		| தாபதப் பிருகுமெய்த் ததீசி கௌதமன் சாபமன் றியுங்கலி தோடத் தான்மிகத்
 தேய்பொருட் பாஞ்சராத் திரம்ப வுத்தமாம்
 பாபநூல் உறுதியே பனவர்க் குண்டரோ.        	106
 |       மெய்த் தவமுடைய பிருகுமுனிவரும் ததீசி முனிவரும், கௌதம    முனிவரும் இட்ட சாபமே அன்றியும் கலியுகத்தின் தோஷத்தானும், மிகத்
 தேய்ந்த பொருள்களைக் கூறும் பாஞ்சராத்திரமும், மாயாவாதமும் ஆகும்
 பாப நூல்களைப் பிரமாணமாக் கோடலே பார்ப்பனர்க்குத் தோன்றும்,
 		| யாதுகொல் கலியதன் இயல்பும் அங்கதற் கேதமும் அதன்மிறை காஞ்சிக் கின்மையும்
 ஓதுதி விரித்தெமக் கெனஉ ரைத்தலுஞ்
 சூதமா முனிமுனி வரர்க்குச் சொல்லினான்.       107
 |       கலி என்பது யாது? அதன் குணவிசேடம் யாது? அதன்     துன்பவிளைவும், அதன் கொடிய ஆட்சியும் காஞ்சித்தலத்தில் அக்கலியின்
 கொடுமை தலையெடாமையும் விரித் தெமக் குரைத்தருள வேண்டும் என
 வினவிய முனிவரர்க்குச் சூதபுராணிகர் விடைகூறத் தொடங்கினர்.
 யுகங்கள் வரம்பெறல்	 கலிநிலைத் துறை	 		| சகமெ லாம்மலை மாதொடுந் தன்னகத் தொடுக்கிப் பகல்இ ராஉள திலதெனும் பகுப்பில் அக் காலைப்
 புகழ்ப டைத்ததான் ஒருவனே வைகிமுன் போல
 அகில லோகமும் படைத்திடக் கருணைசெய் தருளி.   108
 |       எல்லா வுலகங்களையும் உமையம்மையா ரொடும் தன்னுள் ஒடுக்கிப்     பகற்போதும் இராப்போதும் உளதென்றும் இலதென்றும் பகுத்துக்
 கூறவொண்ணாத அச்சங்கார காலத்தில் என்று முள்ள செம்பொருள்
 எனப்பெறும் புகழ்படைத்த பிரானாரே தனித்து வைகிமுன்போல அகில
 உலகங்களையும் தோற்றுவிக்கத் திருவுள்ளங்கொண்டு.
 		| அறிவும் இச்சையும் செய்கையும் அடைவுறத் தோற்றி வெறிம லர்த்தவி சிருக்கைவே தியனைமுன் படைத்து
 மறைகள் ஈந்துபின் மாயனை உம்பரை உலகை
 முறையின் ஈன்றளித் தருளினன் முக்கண்எம் பெருமான்.   109
 |       ஞானசத்தி இச்சாசத்தி கிரியாசத்தி என்னும் முச்சத்திகளை முறையே    தோற்றுவித்து நறுமணங் கமழும் தாமரை மலரி லுறையும் பிரமனை
 முன்னர்ப் படைத்து வேதங்களை அவனுக்குத் தந்து பின்னர்த்
 |