| 		| உவரிசூழ் உலகவைப்பின் உரையமை கேள்வி சான்ற கவிகளென் றுரைப்போர் தம்முள் காஞ்சியைப் புகழார் இல்லை
 அவரெலாம் புகழ்ந்தும் இன்னும் உலப்புறா அதன்சீர் முற்றுஞ்
 சிவநிறை கல்வி சாலாச் சிறியனோ கிளக்க வல்லேன்.      125
 |       கடல் சூழ்ந்த நிலவுலகில் பொருளமைந்த கேள்வி நிரம்பிய     கவிகளென்று பேசப்படுவோர் தம்முள் காஞ்சி நகரைப் புகழாதார்
 ஒருவருமிலர். புலவர் யாவரும் புகழ்ந்தும் முற்றுப்பெறாத அதனைச்
 சிற்றறிவினேன் ஆகிய யானோ எடுத்துக் கூற வல்லமையுடையேன்.
 		| இத்திருக் காஞ்சி வைப்பின் பலதளி யிடத்தும் மேவி அத்தகு கம்ப வாணர் அவரவர்க் கருளிச் செய்த
 உத்தமக் காதை யெல்லாஞ் சூதன்அன் றுரைத்த வாறே
 முத்தமிழ் அறிஞர் தேற மொழிபெயர்த் துரைப்பேன் உய்ந்தேன்.
 |       காஞ்சிபுரத்தில் பல திருக்கோயில்களிலும் மேவித் திருவேகம்பப்    பெருமான் அவ்வவர்க்கு வேண்டிய நலங்களை அருளிய வரலாறுகளைச்
 சூதபுராணிகர் அருளியவாறே முத்தமிழ் அறிஞர் தெளிய வடமொழியினின்றும்
 தமிழ்மொழியிற் பெயர்த்துரைப்பேன் பிறவியினின்றும் தப்பினேன்.
 நகரப் படலம் முற்றுப் பெற்றது.	     ஆகத்திருவிருத்தம் 298	 |