வேறு.
215. எப்பிறப்பினும் பகையுனக் கிவனலன் முனியுமோ ருறவல்லன்
எப்பிறப்பினும் பகையிவர்க் குண்டுமற் றுறவுனக் கிவனல்லன்
இப்பிறப்பிலிப் பகையுற வுக்குநீ யிப்படி யெழுவாயேற்
செப்பிறந்துழிப் பகையுற வுக்குநீ செய்வதென் னிருவாளா.
(இ-ள்.) எப்பிறப்பினும் - (முன் அனந்தமாகிய) எந்த
ஜன்மங்களிலும், உனக்கு - உனக்கு, இவன் - இவ்வித்துத்தந்தன்,
பகையல்லன் - சத்துருவாகவே வரப்பட்டவனுமல்லன், முனியும் -
சஞ்சயந்தமுனியும், ஓர் - ஒரு , உறவல்லன் - மித்திரனாகவே
வரப்பட்டவனுமல்லன், எப்பிறப்பினும் - (இதற்குமுன் அடுத்த) எந்த
ஜன்மங்களிலும், பகை - சத்துருவான தன்மை, இவர்க்கு -
இவ்விருவர்களுக்கும், உண்டு - சில சமயம் உளது, மற்று - பின்னர்,
இவன் - இவ்வித்துத்தந்தன், உனக்கு - உனக்கு, உறவு அல்லன் -
உறவானவனுமல்லன், இப்பிறப்பில் - இந்த ஒரு ஜன்மத்தில்
உண்டாகிய, இப்பகையுறவுக்கு - இச்சத்துருமித்துருத் தன்மைக்கு, நீ -
நீ, இப்படி - இத்தன்மையாக, எழுவாயேல் - ராகத்வேஷங்களுடன்
கூடிச் செல்வையானால், இறந்துழி - இதற்குமுன் சென்ற
ஜன்மங்களிலுண்டாகிய, பகையுறவுக்கு - சத்துருமித்திரத் தன்மைக்கு,
நீ - நீ, செய்வது - செய்வது, என் - என்னவிருக்கின்றது?, செப்பு -
(அதை ஆராய்ந்து தெளிந்து) சொல்வாயாக, (இவற்றை யோசித்து)
இருவாளா - பேசாதிருப்பாயாக, எ-று.
(75)
வேறு.
216. ஐம்பரி வட்டணை யகத்தில் வாழுயிர்க்
கென்பல சொல்லினின் றிவனை நீவிடு
முன்பிவன் றனக்கிந்த முனிக்க ணாயதோ
ரென்புறு வேரத்தா லிவர்க்கி தாயதே.
(இ-ள்.) ஐம்பரி வட்டணை - பஞ்சபரி வர்த்தனையாகிற,
அகத்தில் - பெரிதாகிய ஸம்ஸாரத்தினிடத்தில், வாழ் - ஜீவிக்கப்பட்ட,
உயிர்க்கு - ஆத்மாக்களுக்கு, பலசொல்லின் - அநேகமாகச்
சொல்லினும், என் - என்ன? (அதாவது : என்ன மிகையாகப்போகிறது;
எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்; ஆதலின்), இன்று -
இப்பொழுது, இவனை - இவ்வித்துத்தந்தனை, நீவிடு - நீவிட்டு
விடக்கடவாயாக; முன்பு - பூர்வத்தில், இவன் தனக்கு - இவ்வித்துத்
தந்தனுக்கு, இந்த முனிக்கண் - இச்சஞ்சயந்த முனியினிடத்தில், ஆயது
- உண்டாகியதான, ஓர் - ஒரு, என்புறும் - எலும்புக்குள்ளும்
ஊடுருவிச் செல்லும்படியான, வேரத்தால் - வைரபாவத்தால், இவர்க்கு
- இவ்விருவருக்கும், இதாயது - இத்தன்மையான செய்கை
உண்டானது, எ-று. (76) |