சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 103


 

217. ஆதலால் வெகுளியே பகை நமக்கெலாம்
     தீதெலாம் வினையினாற் றீக்க திப்பெயும்
     காதலார் தம்மையு மொருக ணத்துளே
     ஏதிலா ராக்குமிஃ திகழத் தக்கதே.

     (இ-ள்.)  ஆதலால் -  ஆகையினால், வெகுளியே - கோபமே,
நமக்கு     -   ஆத்மாக்களாகிய    நமக்கு,    பகை   எல்லாம் -
சத்துருவெல்லாமாகும்,     தீதெல்லாம்    -   தீங்குகளெல்லாமாகும்,
வினையினால்    -     (தன்னுடைய)    கருமங்களினால், தீக்கதி -
கெட்டகதிகளிலே,   பெய்யும்   -  (நம்மை) அடைவிக்கும், காதலார்
தம்மையும்   -    உறவினர்களையுங்கூட,   ஒரு கணத்துளே - ஒரு
க்ஷணத்திற்குள்ளே,   ஏதிலராக்கும் - பகைவர்களாகவும் செய்விக்கும்,
(ஆதலின்),    இஃது -   இக்கோபமானது, இகழத்தக்கது - இகழ்ச்சி
செய்யத்தக்கது, எ-று.                                    (77)

வேறு.

218. மற்றிவன் செய்த தீமைக் கேதுமா முனிவ னேமுன்
    கொற்றவ னாகிச் செய்த கொடுமைசெய் கோபத் தீயால்
    வெற்றிவே லுண்ட நீர்போ னின்றவே ரத்தின் வீடி
    யிற்றவிப் பிறப்பின் வேரத் திவனிவை செய்த தென்றான்.

     (இ-ள்.)  மற்று  -  பின்னையும்,  இவன் - இவனால், செய்த -
செய்யப்பட்ட,    தீமைக்கு    -   பொல்லாங்கிற்கு, ஏது - காரணம்,
மாமுனிவனே   -   இச்சஞ்சயந்த     மஹாமுனியே,  (இவன்) முன்-
பூர்வத்தில்,   கொற்றவனாகி - ஸிம்மஸேனனென்னும் அரசனாயிருந்து,
செய்த  - செய்ததாகிய, கொடுமை செய் - துன்பஞ் செய்யும்படியான,
கோபத்தீயால் - கோபாக்கினியினால், வெற்றி - வெற்றியைத்தருகின்ற,
வேலுண்ட  -   காய்ச்சிய வேலாயுதமானது உட்கொண்ட, நீர்போல் -
ஜலத்தைப்போல,    நின்ற    -     தங்கியிராநின்ற,   வேரத்தின் -
வைரபாவத்தோடு,    வீடி  -  இறந்து (தீக்கதிகளில் செல்பவனாகிய),
இவன்   -  இவ்வித்துத்தந்தன்,   இற்றவிப் பிறப்பின் - (ஸிம்மஸேன
வரசனுக்கு)   அந்தியபவமாகிய   சஞ்சயந்தராம் இப்பிறப்பினிடத்தே,
வேரத்து   -    அவ்வைரத்தால்,   இவைசெய்தது - இப்படிப்பட்ட
உபசருக்கங்களைச்    செய்ததுண்டாகியது,    என்றான்  -  என்று
ஆதித்யாபதேவன் சொல்லினான், எ-று.                    (78)

219. இதற்குமுன் போன நான்கு பிறப்பிலிவ் வீரன் செய்கை
    மதித்தவன் பிறவி தோறும் வயிரத்தால் வானத் துய்த்தான்
    அதற்கெலாஞ் செய்வ தென்கொ லருந்தவன் றிரிந்து வாராக்
    கதிக்கணின் றானி வன்றன் றீமையாற் கண்ட துண்டோ.