217. ஆதலால் வெகுளியே பகை நமக்கெலாம்
தீதெலாம் வினையினாற் றீக்க திப்பெயும்
காதலார் தம்மையு மொருக ணத்துளே
ஏதிலா ராக்குமிஃ திகழத் தக்கதே.
(இ-ள்.) ஆதலால் - ஆகையினால், வெகுளியே - கோபமே,
நமக்கு - ஆத்மாக்களாகிய நமக்கு, பகை எல்லாம் -
சத்துருவெல்லாமாகும், தீதெல்லாம் - தீங்குகளெல்லாமாகும்,
வினையினால் - (தன்னுடைய) கருமங்களினால், தீக்கதி -
கெட்டகதிகளிலே, பெய்யும் - (நம்மை) அடைவிக்கும், காதலார்
தம்மையும் - உறவினர்களையுங்கூட, ஒரு கணத்துளே - ஒரு
க்ஷணத்திற்குள்ளே, ஏதிலராக்கும் - பகைவர்களாகவும் செய்விக்கும்,
(ஆதலின்), இஃது - இக்கோபமானது, இகழத்தக்கது - இகழ்ச்சி
செய்யத்தக்கது, எ-று. (77)
வேறு.
218. மற்றிவன் செய்த தீமைக் கேதுமா முனிவ னேமுன்
கொற்றவ னாகிச் செய்த கொடுமைசெய் கோபத் தீயால்
வெற்றிவே லுண்ட நீர்போ னின்றவே ரத்தின் வீடி
யிற்றவிப் பிறப்பின் வேரத் திவனிவை செய்த தென்றான்.
(இ-ள்.) மற்று - பின்னையும், இவன் - இவனால், செய்த -
செய்யப்பட்ட, தீமைக்கு - பொல்லாங்கிற்கு, ஏது - காரணம்,
மாமுனிவனே - இச்சஞ்சயந்த மஹாமுனியே, (இவன்) முன்-
பூர்வத்தில், கொற்றவனாகி - ஸிம்மஸேனனென்னும் அரசனாயிருந்து,
செய்த - செய்ததாகிய, கொடுமை செய் - துன்பஞ் செய்யும்படியான,
கோபத்தீயால் - கோபாக்கினியினால், வெற்றி - வெற்றியைத்தருகின்ற,
வேலுண்ட - காய்ச்சிய வேலாயுதமானது உட்கொண்ட, நீர்போல் -
ஜலத்தைப்போல, நின்ற - தங்கியிராநின்ற, வேரத்தின் -
வைரபாவத்தோடு, வீடி - இறந்து (தீக்கதிகளில் செல்பவனாகிய),
இவன் - இவ்வித்துத்தந்தன், இற்றவிப் பிறப்பின் - (ஸிம்மஸேன
வரசனுக்கு) அந்தியபவமாகிய சஞ்சயந்தராம் இப்பிறப்பினிடத்தே,
வேரத்து - அவ்வைரத்தால், இவைசெய்தது - இப்படிப்பட்ட
உபசருக்கங்களைச் செய்ததுண்டாகியது, என்றான் - என்று
ஆதித்யாபதேவன் சொல்லினான்,
எ-று. (78)
219. இதற்குமுன் போன நான்கு பிறப்பிலிவ் வீரன் செய்கை
மதித்தவன் பிறவி தோறும் வயிரத்தால் வானத் துய்த்தான்
அதற்கெலாஞ் செய்வ தென்கொ லருந்தவன் றிரிந்து வாராக்
கதிக்கணின் றானி வன்றன் றீமையாற் கண்ட துண்டோ. |