226. சீயமா புரத்தின் றன்மை செப்புவன் சிறிது
கேண்மோ
காயமா றாகச் செல்வோர் கண்டபின் கடந்து போகார்
தூயவாந் தலஞ்செய் குன்றஞ் சோலைகண் மாடந் தம்மாற்
சேயிழை மடநல் லார்போல் சித்தத்துக் கினிய
தொன்றே.
(இ-ள்.) சீயமாபுரத்தின்
- அந்த ஸிம்மமஹா புரத்தினது, தன்மை
- தன்மையை, சிறிது - கொஞ்சம், செப்புவன் -
சொல்லுவேன்,
கேண்மோ - கேட்பாயாக, காயமாறாக -
ஆகாயமார்க்கமாக,
செல்வோர் - செல்பவர்களாகிய தேவர்கள் வித்தியாதரர்கள்
முதலியவர்கள், கண்டபின் - அந்நகரத்தைப் பார்த்த பின்பு, கடந்து -
தாண்டி, போகார் - போகமாட்டாமல் தங்குவார்கள்,
தூயவாம் -
பரிசுத்தமாகிய, தலம் - தலங்களும்,
செய்குன்றம் -
கிரீடாத்திரிபர்வதங்களும், சோலைகள் - தோப்புகளும்,
மாடம்
தம்மால் - உப்பரிகைகளும் (ஆகிய) இவைகளால், (பார்க்குமிடத்தில்
அது) சேயிழை - சிவந்த ஒளியுள்ள ஆபரணங்களை யணிந்திராநின்ற,
மடம் - அறியாமையையுடைய, நல்லார்போல்
-
ஸ்திரீமார்களைப்போல, சித்தத்துக்கு - மனதுக்கு, இனியதொன்று
-
இனிமையான தோற்றத்தையுடையதாகிய ஒன்றாகும், எ-று. (3)
227. செப்பிய நகர்க்கு நாதன் சீயமா சேன னென்பான்
வெப்பநின் றறாத வேலான் வேந்தரை வென்ற பெற்றிக்
கொப்புமை யின்றி நின்றா னுதவிகற் பகத்தை யொப்பான்
துப்புறழ் தொண்டை வாயார் தொழுதெழு காமன் கண்டாய்.
(இ-ள்.) செப்பிய
- சொல்லப்பட்ட, நகர்க்கு - அந்த ஸிம்ம
மஹாபுரத்திற்கு, நாதன் - இராஜாவானவன், சீயமாசேன னென்பான் -
சிம்மசேனனென்பவனாகும், வெப்பம்நின்று - சத்துருக்கள்பேரில்
ஏற்படும் கோபவெதுப்பம்நின்று, அறாத -
நீங்காத, வேலான் -
வேலாயுதத்தையுடைய அவ்வரசன், வேந்தரை
- சத்துரு
இராஜாக்களை, வென்ற -
ஜெயித்த, பெற்றிக்கு
-
பெருமைத்தன்மைக்கு, ஒப்புமையின்றி - உவமையில்லாமல், நின்றான் -
நிலைபெற்றிருந்தான், உதவி -
உதவி செய்வதில்,
கற்பகத்தையொப்பான் - கற்பகவிருட்சத்துக்குச் சமானமானவன், துப்பு
- பவளத்தை, உறழ் - ஒத்த, தொண்டை - கொவ்வைக் கனிபோன்ற,
வாயார் - சிவந்த வாயையுடைய ஸ்திரீமார்கள்,
தொழுதெழு -
வணங்கிச் செல்லும்படியான, காமன் - மன்மதனாகும், கண்டாய் -
தெரிந்தனையா?, எ-று.
(4)
228. ஊனுமிழ்ந் திலங்கும் வைவேல் மன்னவ னுள்ளத் துள்ளாள்
தேனுமிழ்ந் திலங்கு மைம்பாற் றேவிதா னிராம தத்தை
வானுமிழ்ந் திலங்கு மின்போல் வருந்துநுண் ணிடையாள் வாரி
தானுமிழ்ந் தமிழ்து பெய்த கலசம்போற் றனத்தினாளே.
|