110மேருமந்தர புராணம்  


 

னைப்போல, வளர்ந்து - விருத்தியடைந்து, அந்தமில் - அளவில்லாத,
உவகைக்கு  -  சந்தோஷத்திற்கு,  இடமாயினான் -  ஸ்தானமானான்,
எ-று.

     நாளினால்    என்பதில்   இன்,  ஆ  -  சாரியைகள்;  இன் -
சாரியையாய், ஆல் - உருபுமயக்கமாக வந்ததெனினுமாம்.         (9)

 233. சுரந்த கார்முகில் போல சுதத்தனென்
     றிரந்த வர்க்கிடர் தீர வளித்தவன்
     பரந்து லாம்பெயர் பத்திர மித்திரனெம்
     மரந்தை தீர்த்தலி னாமென வோதினான்.

     (இ-ள்.) சுரந்த  -  நீர்நிறைந்த,  கார்  -  கரிய, முகில்போல -
மேகத்தைப்போல, (அதாவது அம்மேகம் மழையைப் பொழிவதுபோல்),
சுதத்தனென்று   -   நல்ல   ஈகையையுடையவனென்று   உலகத்தார்
சொல்லும்படி,  இரந்தவர்க்கு  -  யாசித்தவர்களுக்கு, இடர் - வறுமை,
தீர - நீங்க, அளித்து  -  திரவியத்தைக்கொடுத்து,  அவன் -  அந்த
ஸ்ரீஷ்டியானவன்,   எம் - எங்களுடைய,  அரந்தை -  வருத்தத்தை,
தீர்த்தலின்  -  இக்குமாரன்   நீக்கினபடியால்,  (இவனுக்கு)  பரந்து -
எவ்விடங்களினும்  சென்று,  உலாம்  -  வியாபிக்கும் (புகழையுடைய),
பெயர்     -     நாமமானது,      பத்திரமித்திரன்     ஆமென -
பத்திரமித்திரனாகுமென்று, ஓதினான் - (அப்புத்திரனுக்குப் பெயரிட்டுச்)
சொன்னான், எ-று.

     எனவென்னும் எச்சம் என்று எனத்திரிந்து வந்தது.         (10)

 234. கலையி னின்பமுங் காமரு கன்னியர்
     மலைவி னின்பமு முத்தொடு மாமணி
     விலையி னின்பமும் வேண்டினர்க் கீந்தெய்துந்
     தலையி னின்பமுந் தானவ னெய்தினான்.

     (இ-ள்.) (அதன்மேல்) கலையின் இன்பமும் - சாஸ்திரங்களைத்
தெரிந்து அதனாலாகிய இன்பத்தையும், காமரு - அழகிய, கன்னியர் -
மாதர்களினது, மலைவினின்பமும் - இல்லற வியலாலுண்டாகிய சுகமும்,
முத்தொடு   -   முத்துக்களோடு,  மா   -   பெரியதாகிய, மணி -
இரத்தினங்களுடைய, விலையினின்பமும்   -  விலைமதித்தலாலாகிய
இரத்தின வியாபாரத்தின் சுகமும், வேண்டினர்க்கு -யாசித்தவர்களுக்கு,
ஈந்து - கொடுத்து, எய்தும் - அதனாலடையப்பட்ட, தலையினின்பமும்
-  மேன்மையின்    சுகத்தையும்,   அவன்    -   அக்குமாரனாகிய
பத்திரமித்திரன், எய்தினான் - அடைந்தான், எ-று.

     தான் - அசை.                                      (11)