னைப்போல, வளர்ந்து - விருத்தியடைந்து, அந்தமில்
- அளவில்லாத,
உவகைக்கு - சந்தோஷத்திற்கு, இடமாயினான் - ஸ்தானமானான்,
எ-று.
நாளினால் என்பதில்
இன், ஆ - சாரியைகள்; இன் -
சாரியையாய், ஆல் - உருபுமயக்கமாக வந்ததெனினுமாம்.
(9)
233. சுரந்த கார்முகில் போல சுதத்தனென்
றிரந்த வர்க்கிடர் தீர வளித்தவன்
பரந்து லாம்பெயர் பத்திர மித்திரனெம்
மரந்தை தீர்த்தலி னாமென வோதினான்.
(இ-ள்.) சுரந்த -
நீர்நிறைந்த, கார் - கரிய, முகில்போல -
மேகத்தைப்போல, (அதாவது அம்மேகம் மழையைப் பொழிவதுபோல்),
சுதத்தனென்று - நல்ல ஈகையையுடையவனென்று
உலகத்தார்
சொல்லும்படி, இரந்தவர்க்கு - யாசித்தவர்களுக்கு, இடர் - வறுமை,
தீர - நீங்க, அளித்து - திரவியத்தைக்கொடுத்து, அவன்
- அந்த
ஸ்ரீஷ்டியானவன், எம் - எங்களுடைய, அரந்தை - வருத்தத்தை,
தீர்த்தலின் - இக்குமாரன் நீக்கினபடியால், (இவனுக்கு)
பரந்து -
எவ்விடங்களினும் சென்று, உலாம் - வியாபிக்கும் (புகழையுடைய),
பெயர் - நாமமானது, பத்திரமித்திரன்
ஆமென -
பத்திரமித்திரனாகுமென்று, ஓதினான் - (அப்புத்திரனுக்குப் பெயரிட்டுச்)
சொன்னான், எ-று.
எனவென்னும் எச்சம் என்று எனத்திரிந்து
வந்தது. (10)
234. கலையி னின்பமுங் காமரு கன்னியர்
மலைவி னின்பமு முத்தொடு மாமணி
விலையி னின்பமும் வேண்டினர்க் கீந்தெய்துந்
தலையி னின்பமுந் தானவ னெய்தினான்.
(இ-ள்.) (அதன்மேல்) கலையின்
இன்பமும் - சாஸ்திரங்களைத்
தெரிந்து அதனாலாகிய இன்பத்தையும், காமரு - அழகிய, கன்னியர் -
மாதர்களினது, மலைவினின்பமும் - இல்லற வியலாலுண்டாகிய சுகமும்,
முத்தொடு - முத்துக்களோடு, மா -
பெரியதாகிய, மணி - இரத்தினங்களுடைய, விலையினின்பமும் -
விலைமதித்தலாலாகிய
இரத்தின வியாபாரத்தின் சுகமும், வேண்டினர்க்கு -யாசித்தவர்களுக்கு,
ஈந்து - கொடுத்து, எய்தும் - அதனாலடையப்பட்ட, தலையினின்பமும்
- மேன்மையின் சுகத்தையும், அவன் -
அக்குமாரனாகிய
பத்திரமித்திரன், எய்தினான் - அடைந்தான், எ-று.
தான் - அசை. (11)
|