மன்ற மாதவர்
கையிட்ட வல்சியால்
நின்ற போக நிலம்பெற்ற தொக்குமே.
(இ-ள்.) சாத்தொடு
- ஸார்த்தத்தோடு, சென்று - போகி,
அத்தீவினை - அந்த இரத்தின தீபத்தை, சேர்ந்தவன்
- சேர்ந்த
பத்திரமித்திரன், ஒன்றும் -
பொருந்திய, வாணிபத்தால் -
வியாபாரத்தால், பெற்ற - அடைந்த, ஊதியம்
- இலாபமானது,
மன்ற - நிச்சயமாக, மாதவர் - மஹா தபஸையுடைய முனிவர்களின்,
கை - கையிலே, இட்ட -
இடப்பட்ட, வல்சியால் - ஆகார
தானத்தினாலே, நின்ற - இவ்வுலகத்தில் நிலைபெற்ற, போகநிலம்
-
உத்தம போக பூமியை, பெற்றதொக்கும் -
அடைந்ததற்குச்
சமானமாகும், எ-று.
எனவே மிகுதியான
இலாபம் பெற்றானென்பது
பெறப்பட்டது. (14)
238. புண்ணி யம்முத யஞ்செய்த போழ்தினில்
எண்ணி லாத பொருட்குவை யாவையும்
நண்ணு மென்றருள் நாத னுரையினுக்
கண்ண லேயெடுத் தீடது வாயினான்.
(இ-ள்.) புண்ணியம்
- முன்செய்த புண்ணியம், உதயஞ்செய்த
போழ்தினில் - உதித்த காலத்தில், எண்ணிலாத - கணக்கில்லாத,
பொருள்குவை யாவையும் -
திரவிய சமூகங்களெல்லாம்,
நண்ணுமென்று - அடையுமென்று, அருள் -
கூறியருளுகின்ற,
நாதனுரையினுக்கு - ஸர்வஜ்ஞனுரைத்த வசனத்திற்கு, அண்ணலே -
ஸ்ரீஷ்டனாகிய பத்திரமித்திரனே, எடுத்தீடது - எடுத்துக் காட்டாக
(அதாவது : உவமையாக), ஆயினான் - ஆனான், எ-று. (15)
239. மணியும் முத்தும் வயிரமுஞ் சந்தனத்
துணியு நல்லகி லுந்துகி ரும்பிற
மணியுந் தூரியுங் கொண்டு வருமவன்
இணையில் சீய புரமதை யெய்தினான்.
(இ-ள்.) (இவ்வாறு இலாபத்தை
அடையவே திரும்பி) மணியும் -
இரத்தினங்களும், முத்தும் -
முத்துக்களும், வயிரமும் -
வச்சிரக்கற்களும், சந்தனத்துணியும் - சந்தனக்கட்டைகளும், நல்
-
நன்மையாகிய, அகிலும் -
அகிற்கட்டைகளும், துகிரும் -
பவளங்களும், பிறமணியும் - இவையல்லாமல் இன்னும் அநேகமாகிய
பிற இரத்தினங்களும், தூரியும் -
பலகறையும், கொண்டு -
வியாபாரத்தால் சம்பாதித்துக் கொண்டு, வருமவன் -
வருகின்ற
அப்பத்திரமித்தின், இணையில் - உவமையில்லாத,
சீயபுரமதை -
ஸிம்ம மஹாபுரத்தை, எய்தினான் - அடைந்தான், எ-று. |