132மேருமந்தர புராணம்  


 

மாமதியும்  -  நிபுணமாமதி  என்பவளும், போகி - சென்று, சுரும்பு -
வண்டுக்கூட்டங்கள்,    இருந்துறங்கும்   -   தங்கித்துயில்செய்கின்ற,
தொங்கல்  -  புஷ்பமாலையை அணிந்திரா நின்ற, அமைச்சன் தன் -
அந்த  மந்திரியினுடைய, மாடம் - மாளிகையை,  துன்னி - அடைந்து,
விரும்பிவந்து  - அவ்விடத்தில்  தன்னை விரும்பி வந்து, அடைந்த -
சேர்ந்த,    பண்டகாரிக்கு    -    அம்மந்திரியினுடைய    பாண்டா
காரியாகியவனுக்கு,    வேறு    -   நடந்ததொன்றிருக்க   வேறொரு
விஷயத்தை, சொன்னாள் - கீழ்வருமாறு சொன்னாள், எ-று.      (62)

 286. சித்திர மொத்த ராம தத்தையுஞ் சீய சேனுஞ்
     சத்தியம் வைத்த நாமன் றன்னைமுன் னாணை யிட்டுப்
     பத்திர மித்தி ரன்செப் புண்டெனிற் கொடுக்க பார்மேல்
     நித்தலு மிட்ட பூசல் நெடும்பழி விளைக்கு மென்ன.

     (இ-ள்.)   சித்திர   மொத்த   -   சித்திரப்பாவையை யொத்த,
ராமதத்தையும்  -  இராமதத்தா  தேவியும்,  சீயசேனும் -  சிம்மஸேன
மகாராஜனும்,    சத்தியம்   வைத்த   -   சத்திய  மென்கிறபதத்தை
முன்னேவைத்திராநின்ற,   நாமன்றன்னை   -   (பெயருள்ளவனாகிய)
சத்தியகோஷமந்திரிக்கு,  முன் - எதிரில்,  ஆணையிட்டு - வாக்குறுதி
செய்து,     பத்திரமித்திரன்     -    பத்திரமித்திரனது,    செப்பு -
இரத்தினச்செப்பு,  உண்டெனில்  -   உண்டாயிருந்தால்,  கொடுக்க -
கொடுக்கக்   கடவாய்,   பார்மேல்   -   பூமியின்மேல்,  நித்தலும் -
நாடோறும்,  இட்ட  -  பத்திரமித்திரனால்   செய்யப்பட்ட,   பூசல் -
இரைச்சல்,  நெடும் - பெரிய,  பழி - பழியை,  விளைக்கும் - உண்டு
பண்ணும், என்ன - என்று சொல்ல, எ-று.                    (63)

 287. மத்தக மொத்த திண்டோண் மந்திரி சொன்ன வார்த்தை
     வித்தக ருத்த மர்க்கும் வரும்பழி விலக்க லாகா
     பத்திர பாகு வல்லி பரதற்கும் பரியொன் றாய
     தித்தலத் தென்று நின்ற திந்திரோ பேந்தி ரர்க்கும்.

     (இ-ள்.)     மத்தகம்   -   யானைமஸ்தகம்போன்ற,   திண் -
கெட்டியாகிய,  தோள்  -  புயத்தையுடைய,  மந்திரி  -  அமைச்சன்,
சொன்ன  -  பதில்சொன்ன,  வார்த்தை  -  வசனமாவது,  வித்தகர் -
சாமர்த்திய புருஷர்களுக்கும், உத்தமர்க்கும் - உத்தமபுருஷர்களுக்கும்,
வரும்   -  வருகின்ற,  பழி   -   பழிச்சொல்லை,   விலக்கலாகா -
தடைசெய்தல்  முடியாது,  பத்திரம்  -  பூஜ்ஜியமாகிய,  பாகுவல்லி -
பாகுபலி   குமாரனுக்கு,   பரதற்கும்  -  பரதராஜனுக்கும்,  இந்திரோ
பேந்திரர்க்கும்  -  இந்திரஸேன   உபேந்திரஸேனரென்னும்  இரண்டு
இராஜகுமாரர்களுக்கும்,    பழியொன்றாயது   -   உண்டாகிய   ஒரு
பழியானது,   இத்தலத்து   -   இவ்வுலகத்தில்,  என்றும்   நின்றது -
எப்பொழுதும் வியாபித்து நின்றது, எ-று.                     (64)

     இங்குக்கூறியவர்களின்     விருத்தாந்தத்தை    ஸ்ரீபுராணத்தில்
அறிந்துகொள்க.