(இ-ள்.)
(அதன்மேல்) இடம் பெரிதுடையவர் -
பெரிய
ஏதுக்களை அல்லது மனோ வலிமையை யுடையவர்கள், தொடங்கிய
- செய்ய ஆரம்பித்த, பழியில் காரியம் - பழியில்லாத செய்கையை,
முடித்தலால் - முடித்து ஜெயம் பெறுவதல்லாமல்,
விடார்கள் -
நடுவில் தளர்ச்சியடைந்து அதனை விடமாட்டார்கள், என்பது - என்று
சொல்வது, மடங்கல்போல் - சிம்மத்தைப்போல, நின்று
- பலமாய்
நின்று, இந்த வணிகன் - இந்த வர்த்தகன், மந்திரி
- மந்திரியால்
செய்யப்பட்ட, இடைஞ்சலை - பொல்லாங்கை, கடந்து - ஜெயிக்க,
இது - இந்தக் காரியம், முடிந்தது - முடிந்ததேயாகும்,
(அதாவது
இதுவே அதற்குதாரணமாகும்), என்றனர் - என்று அந்நகரத்திலுள்ள
ஜனங்கள் சொன்னார்கள், எ-று. (91)
வேறு.
315. மத்தமால் களிறுபோகும் வழியினைக் குழித்து மாணப்
பொய்த்தரை செய்து வீழ்த்துப் பிடித்திடும் புலையன் போலச்
சத்திய கோட னென்னுஞ் சடத்தினாற் றன்னைத் தேற்றி
வைத்திந்த வையத் தோடும் வஞ்சித்தா னென்னை யென்னா.
(இ-ள்.) (அப்போது அரசன்)
மத்தம் - மதம் பொருந்திய, மால்
- பெரிதாகிய, களிறு - யானை, போகும் - போகின்ற, வழியினை
-
வழியை, குழித்து - குழியாகச்செய்து, மாண
- மாட்சிமையாக,
பொய்த்தரை செய்து - மேல்பரப்புச் செய்து குழிதெரியாமல் மறைத்துத்
தரையாகவே பொய்யாகக் காட்டி, வீழ்த்து - அதில் யானைகளை
விழும்படிசெய்து, பிடித்திடும் - பிடிக்கின்ற,
புலையன்போல -
புலையனைப்போல, சத்திய கோடனென்னும் -
சத்திய
கோஷனென்கிற, சடத்தினால் - திரையினால் (மறைத்து), தன்னை -
தன்னை, தேற்றிவைத்து - நல்லவனென்று யாவர்களுக்கும் தெரியப்
பண்ணி, இந்த வையத்தோடும் - இந்த உலகிலுள்ள ஜனங்களையும்,
என்னை - என்னையும், வஞ்சித்தான் - ஏமாற்றினான், என்னா
-
என்று, எ-று. (92)
316. கோபியா வரசு நீதிக் குறைபடா வகையி னான்மா
பாவியா மிவனை நூலின் படியினாற் கடிக வென்ன
நாபிகா லத்தி னிப்பா னடக்கின்ற வழக்கு நூலின்
றீபிகா மனத்தி னார்கள் செய்வது தெரிந்து சொன்னார்.
(இ-ள்.) கோபியா
- கோபமுற்று, மா - பெரிய, பாவியாம் -
பாபிஷ்டனாகிய, இவனை - இந்தச் சத்திய கோஷனை, அரசுநீதி -
இராஜ்ஜிய நீதியில், குறைபடாவகையினால் - குறையாத விதமாக,
நூலின் படியினால் - சட்டத்தின்
பிரகாரம், கடிக -
தண்டிக்கக்கடவீராக, என்ன -
என்று சொல்ல, நூலின் -
இராஜ்ஜியநீதிச் சட்டங்களின்
ஆராய்ச்சியினாலே,
தீபிகாமனத்தினார்கள் - தீபிகை |