|        (இ-ள்.) 
          (அதன்மேல்)   இடம்   பெரிதுடையவர்  -  
        பெரிய 
        ஏதுக்களை  அல்லது  மனோ வலிமையை யுடையவர்கள், தொடங்கிய 
        - செய்ய  ஆரம்பித்த,  பழியில்  காரியம் - பழியில்லாத செய்கையை, 
        முடித்தலால்  -  முடித்து   ஜெயம்  பெறுவதல்லாமல்,  
        விடார்கள் - 
        நடுவில் தளர்ச்சியடைந்து அதனை விடமாட்டார்கள், என்பது - என்று 
        சொல்வது,  மடங்கல்போல்  -  சிம்மத்தைப்போல,  நின்று 
        - பலமாய் 
        நின்று,  இந்த  வணிகன்  -  இந்த  வர்த்தகன், மந்திரி 
        - மந்திரியால் 
        செய்யப்பட்ட,  இடைஞ்சலை  -  பொல்லாங்கை, கடந்து - ஜெயிக்க, 
        இது  -  இந்தக்  காரியம்,  முடிந்தது  - முடிந்ததேயாகும், 
        (அதாவது 
        இதுவே  அதற்குதாரணமாகும்),  என்றனர் - என்று அந்நகரத்திலுள்ள 
        ஜனங்கள் சொன்னார்கள், எ-று.                             (91) 
       
      வேறு.  
       315. மத்தமால் களிறுபோகும் வழியினைக் குழித்து மாணப் 
             பொய்த்தரை செய்து வீழ்த்துப் பிடித்திடும் புலையன் போலச் 
             சத்திய கோட னென்னுஞ் சடத்தினாற் றன்னைத் தேற்றி 
             வைத்திந்த வையத் தோடும் வஞ்சித்தா னென்னை யென்னா.  
           (இ-ள்.) (அப்போது  அரசன்) 
        மத்தம் - மதம் பொருந்திய, மால் 
        - பெரிதாகிய,  களிறு -  யானை,  போகும் - போகின்ற, வழியினை 
        - 
        வழியை,    குழித்து  -  குழியாகச்செய்து,  மாண  
        -  மாட்சிமையாக, 
        பொய்த்தரை செய்து - மேல்பரப்புச் செய்து குழிதெரியாமல் மறைத்துத் 
        தரையாகவே  பொய்யாகக்  காட்டி, வீழ்த்து  -  அதில் யானைகளை 
        விழும்படிசெய்து,   பிடித்திடும்   -   பிடிக்கின்ற,  
        புலையன்போல - 
        புலையனைப்போல,    சத்திய    கோடனென்னும்    -     
        சத்திய 
        கோஷனென்கிற,  சடத்தினால்  - திரையினால் (மறைத்து), தன்னை - 
        தன்னை,  தேற்றிவைத்து - நல்லவனென்று   யாவர்களுக்கும் தெரியப் 
        பண்ணி,  இந்த  வையத்தோடும் - இந்த உலகிலுள்ள ஜனங்களையும், 
        என்னை  -  என்னையும்,  வஞ்சித்தான் - ஏமாற்றினான்,  என்னா 
        - 
        என்று, எ-று.                                            (92) 
       
       316. கோபியா வரசு நீதிக் குறைபடா வகையி னான்மா 
             பாவியா மிவனை நூலின் படியினாற் கடிக வென்ன 
             நாபிகா லத்தி னிப்பா னடக்கின்ற வழக்கு நூலின் 
             றீபிகா மனத்தி னார்கள் செய்வது தெரிந்து சொன்னார். 
       
           (இ-ள்.)  கோபியா 
         -  கோபமுற்று,  மா - பெரிய, பாவியாம் - 
        பாபிஷ்டனாகிய,  இவனை  -  இந்தச் சத்திய கோஷனை, அரசுநீதி - 
        இராஜ்ஜிய  நீதியில்,  குறைபடாவகையினால்  -  குறையாத  விதமாக, 
        நூலின்    படியினால்    -   சட்டத்தின் 
            பிரகாரம்,     கடிக - 
        தண்டிக்கக்கடவீராக,    என்ன    -    
        என்று   சொல்ல, நூலின் - 
        இராஜ்ஜியநீதிச்           சட்டங்களின் 
               ஆராய்ச்சியினாலே, 
        தீபிகாமனத்தினார்கள் - தீபிகை   |