பட்டான், (அதனால்), அரிவையர்க்கு - ஸ்திரீமார்களுக்கும்,
அன்புறும்
இளமைமூப்பில் ஒருவன் ஒத்தான் -
அன்பு பொருந்திய
இளமைப்பருவத்திலே இனிமையையும் முதுமைப்பருவத்திலே
வெறுப்பையும் உண்டாக்கும் ஒருவனை நிகர்த்தான், எ-று. (97)
321. மாயத்தால் செப்பை வவ்வி மந்திரி வணிகன் றன்னைப்
பேயொத்துச் சுழலப் பண்ணிப் பெருந்துயர் முன்னஞ் செய்தான்
மாயத்தாற் செப்புத் தன்கை வாங்கவும் பட்டுப்
பின்னைப்
பேயொத்துச் சுழன்று சாலப் பெருந்துயர் தானு முற்றான்.
(இ-ள்.) (அவனுடைய
அந்நிலைமையைப்பார்த்து) மாயத்தால் -
மாயச்சாரத்தால், செப்பை - இரத்தினச் செப்பை, வவ்வி - அபகரித்து,
மந்திரி - மந்திரியானவன், வணிகன்றன்னை -
செட்டியாகிய
பத்திரமித்திரனை, பேயொத்து - பேய்க்குச் சமானமாக, சுழலப்பண்ணி
- அலையும்படி செய்து, பெருந்துயர் - பெரிதாகிய
துன்பத்தை,
முன்னம் - முன்னால், செய்தான் - பண்ணினான்,
மாயத்தால் -
மாயாச்சாரத்தால், செப்பு - அச்செப்பை, தன்கை
- தன்னுடைய
கையினின்றும், வாங்கவும் பட்டு - வாங்கி விடவும் பட்டு, பின்னை -
பிற்பாடு, பேயொத்து - பேய்க்குச்சமானமாகி, சுழன்று - சுழற்றி யுற்று,
சால - மிகவும், பெருந்துயர் - பெரிதாகிய துன்பத்தை,
தானும் -
அம்மந்திரிதானும், உற்றான் - அடைந்தான், எ-று. (98)
322. மணியினால் வணிக னுக்கும் மந்திரி தனக்கும் வந்த
தணிவிலாத் துயரம் பற்றின் றன்மையைச் சாற்றக்
கண்டும்
பணிவிலாத் துயர மாக்கும் பற்றினைப் பரியும் நல்ல
துணிவிலா தார்க ளன்றே துயரங்கட் கிறைவ ராவார்.
(இ-ள்.) மணியினால்
- இரத்தினத்தால், வணிகனுக்கும் -
வர்த்தக னாகிய பத்திர மித்திரனுக்கும்,
மந்திரி தனக்கும் -
இம்மந்திரிக்கும், வந்த -
வந்துசேர்ந்ததாகிய, தணிவிலா -
குறைவில்லாத (அதாவது விலகாத), துயரம் - துக்கமாகிய, பற்றின் -
ஆசையினது, தன்மையை - ஸ்வபாவத்தை, சாற்றக்
கண்டும் -
சொல்லக்கேட்டறிந்தும், பணிவிலா - குறைவில்லாத,
துயரம் -
துக்கத்தை, ஆக்கும் - உண்டாக்கும், பற்றினை - ஆசையை, பரியும்
- கெடுக்கும், (அதாவது நீக்கும்படியான), நல்ல -
நன்மையாகிய,
துணிவு - நிச்சய ஞானம், இல்லாதார்களன்றே - இல்லாதவர்களே,
துயரங்கட்கு - துக்கங்களுக்கும், இறைவராவார் - தலைவராவார்கள்,
எ-று.
(99)
323. பற்றினைப் பற்றி னாலே பற்றெனப் பற்றி னாரைப்
பற்றுதா னிடும்பை நீருட் பரியட்டந் தன்னை யாக்கும்
|