பட்டான், (அதனால்), அரிவையர்க்கு - ஸ்திரீமார்களுக்கும், 
        அன்புறும் 
        இளமைமூப்பில்    ஒருவன்   ஒத்தான்   -   
        அன்பு    பொருந்திய 
        இளமைப்பருவத்திலே      இனிமையையும்    முதுமைப்பருவத்திலே 
        வெறுப்பையும் உண்டாக்கும் ஒருவனை நிகர்த்தான், எ-று.       (97) 
       
       321. மாயத்தால் செப்பை வவ்வி மந்திரி வணிகன் றன்னைப் 
             பேயொத்துச் சுழலப் பண்ணிப் பெருந்துயர் முன்னஞ் செய்தான் 
             மாயத்தாற் செப்புத் தன்கை வாங்கவும் பட்டுப் 
        பின்னைப் 
             பேயொத்துச் சுழன்று சாலப் பெருந்துயர் தானு முற்றான். 
       
           (இ-ள்.)  (அவனுடைய 
        அந்நிலைமையைப்பார்த்து) மாயத்தால் - 
        மாயச்சாரத்தால், செப்பை - இரத்தினச் செப்பை, வவ்வி - அபகரித்து, 
        மந்திரி   -  மந்திரியானவன்,   வணிகன்றன்னை   -   
        செட்டியாகிய 
        பத்திரமித்திரனை, பேயொத்து - பேய்க்குச் சமானமாக, சுழலப்பண்ணி 
        - அலையும்படி   செய்து,   பெருந்துயர்  -  பெரிதாகிய 
        துன்பத்தை, 
        முன்னம்  -  முன்னால்,  செய்தான்  -  பண்ணினான், 
        மாயத்தால் - 
        மாயாச்சாரத்தால்,  செப்பு  -  அச்செப்பை,   தன்கை 
        - தன்னுடைய 
        கையினின்றும்,  வாங்கவும் பட்டு - வாங்கி விடவும் பட்டு, பின்னை - 
        பிற்பாடு, பேயொத்து - பேய்க்குச்சமானமாகி, சுழன்று - சுழற்றி யுற்று, 
        சால  -  மிகவும்,  பெருந்துயர் - பெரிதாகிய  துன்பத்தை,  
        தானும் - 
        அம்மந்திரிதானும், உற்றான் - அடைந்தான், எ-று.             (98) 
       
       322. மணியினால் வணிக னுக்கும் மந்திரி தனக்கும் வந்த 
             தணிவிலாத் துயரம் பற்றின் றன்மையைச் சாற்றக் 
        கண்டும் 
             பணிவிலாத் துயர மாக்கும் பற்றினைப் பரியும் நல்ல 
             துணிவிலா தார்க ளன்றே துயரங்கட் கிறைவ ராவார். 
       
           (இ-ள்.)  மணியினால் 
          -   இரத்தினத்தால்,  வணிகனுக்கும் - 
        வர்த்தக   னாகிய   பத்திர   மித்திரனுக்கும், 
          மந்திரி  தனக்கும் - 
        இம்மந்திரிக்கும்,    வந்த    -   
        வந்துசேர்ந்ததாகிய,    தணிவிலா - 
        குறைவில்லாத (அதாவது  விலகாத),  துயரம் - துக்கமாகிய, பற்றின் - 
        ஆசையினது,    தன்மையை  -  ஸ்வபாவத்தை,  சாற்றக் 
         கண்டும் - 
        சொல்லக்கேட்டறிந்தும்,   பணிவிலா   -  குறைவில்லாத, 
          துயரம் - 
        துக்கத்தை,  ஆக்கும் - உண்டாக்கும்,  பற்றினை - ஆசையை, பரியும் 
        - கெடுக்கும்,   (அதாவது   நீக்கும்படியான),  நல்ல - 
        நன்மையாகிய, 
        துணிவு  - நிச்சய   ஞானம்,  இல்லாதார்களன்றே - இல்லாதவர்களே, 
        துயரங்கட்கு  -  துக்கங்களுக்கும், இறைவராவார் - தலைவராவார்கள், 
        எ-று.                                                  
        (99)  
       323. பற்றினைப் பற்றி னாலே பற்றெனப் பற்றி னாரைப் 
             பற்றுதா னிடும்பை நீருட் பரியட்டந் தன்னை யாக்கும் 
        |