152மேருமந்தர புராணம்  


 

     மக்க ளாயுகம் மாய்ந்த போழ்தினே
     திக்க வாயுகம் சென் றுதித்ததே.

     (இ-ள்.)   மிக்கு   நின்று   -   மிகுதியாக  நின்று,  எரி -
பிரகாசிக்கின்ற,  விளக்கு - தீபமானது, வீந்துழி - அவிந்தவிடத்தில்,
அக்கணத்து   -   அப்பொழுதே,    இருள்  -  அந்தகாரமானது,
அடையுமாறு   போல்   -   சேர்வது   போல்,   மக்களாயுகம் -
மனுஷ்யாயுஷ்யம்,   மாய்ந்தபோழ்தினே  -  (அவ்வாறு)   நீங்கின
காலத்திலேயே,  திக்கவாயுகம் - திரியக்காயுஷ்யமானது,  சென்று -
அவனிடத்தே  புகுந்து,  (அதாவது வந்து), உதித்தது - தோன்றியது,
எ-று.                                                (108)

 332. ஆயு வுங்கதி யைம்பொறி புவ்வி
     நீச கோதமு நின்று தித்திடப்
     போயம் மன்னவன் பொன்ன றையா
     வாய னன்பெய ரகந்த னாகுமே.

     (இ-ள்.)  (அவ்வாறு)  ஆயுவும்  -  திரியக்காயுஷ்யமும், கதி -
திரியக்கதிநாமமும்,  ஐம்பொறி  -  பஞ்சேந்திரிய ஜாதிநாமமும், புவ்வி
- திரியக்கத்தியானு  பூர்வி  நாமமும், நீசகோதமும் - நீசகோத்திரமும்,
(ஆகிய   இக்கர்மங்கள்),   நின்று - பந்தித்து   நின்று,  உதித்திட -
உதயஞ்செய்ய,  போய்  -  அம்மந்திரி  இறந்துபோய், அம்மன்னவன்
- அந்த  சிம்மஸேனவரசனுடைய, பொன்னறை  -  பாண்டாகாரத்தில்,
பெயர்  அகந்தனாகும் - அகந்தனமென்னும் பெயராகின்ற, (அதாவது : பெயரையுடைய), அரவாயினன் - சர்ப்பமாகப் பிறந்தான், எ-று.   (109)

வேறு

 333. அரசன் மேற்கரு விற்பொரு ளாசையின்
     மரீஇய மாயத்தின் மந்திரி மற்றிந்த
     திரியக் காயினன் றீயவிச் செய்கையை
     மருவு வாருள ரோமதி மாந்தரே.

     (இ-ள்.)  அரசன்மேல் - இராஜாவின் பேரிலேற்பட்ட, கருவில் -
த்வேஷத்தினாலும், பொருளாசையின் - பொருள்களின் மேலுண்டாகிய
ஆசையினாலும், மரீஇய  -  மருவிய  (அதாவது  சேர்ந்திரா  நின்ற),
மாயத்தின்  - மாயாச் சாரத்தினாலும், மந்திரி - ஸ்ரீபூதிமந்திரி, இந்த -
இப்படிப்பட்ட,  திரியக்காயினன்   -  விலங்கு  ஜாதியிற்  பிறந்தான்,
மதிமாந்தர்   -  புத்திவந்தர்களுள்,   தீய    -    பொல்லாங்காகிய,
இச்செய்கையை   -   இப்படிப்பட்ட  ராகத்வேஷ  மோககாரியத்தை,
மருவுவார்  -  சேர்பவாக்ள், உளரோ  - உண்டோ,  (இல்லை), எ-று.

     மற்று - அசை.                                     (110)