மக்க ளாயுகம் மாய்ந்த போழ்தினே
திக்க வாயுகம் சென் றுதித்ததே.
(இ-ள்.) மிக்கு
நின்று - மிகுதியாக நின்று,
எரி -
பிரகாசிக்கின்ற, விளக்கு - தீபமானது, வீந்துழி - அவிந்தவிடத்தில்,
அக்கணத்து - அப்பொழுதே, இருள் -
அந்தகாரமானது,
அடையுமாறு போல் - சேர்வது போல்,
மக்களாயுகம் -
மனுஷ்யாயுஷ்யம், மாய்ந்தபோழ்தினே - (அவ்வாறு) நீங்கின
காலத்திலேயே, திக்கவாயுகம் - திரியக்காயுஷ்யமானது, சென்று -
அவனிடத்தே புகுந்து, (அதாவது வந்து), உதித்தது - தோன்றியது,
எ-று.
(108)
332. ஆயு வுங்கதி யைம்பொறி புவ்வி
நீச கோதமு நின்று தித்திடப்
போயம் மன்னவன் பொன்ன றையா
வாய னன்பெய ரகந்த னாகுமே.
(இ-ள்.) (அவ்வாறு)
ஆயுவும் - திரியக்காயுஷ்யமும், கதி -
திரியக்கதிநாமமும், ஐம்பொறி - பஞ்சேந்திரிய ஜாதிநாமமும்,
புவ்வி
- திரியக்கத்தியானு பூர்வி நாமமும், நீசகோதமும் - நீசகோத்திரமும்,
(ஆகிய இக்கர்மங்கள்), நின்று - பந்தித்து நின்று,
உதித்திட -
உதயஞ்செய்ய, போய் - அம்மந்திரி இறந்துபோய், அம்மன்னவன்
- அந்த சிம்மஸேனவரசனுடைய, பொன்னறை - பாண்டாகாரத்தில்,
பெயர் அகந்தனாகும் - அகந்தனமென்னும் பெயராகின்ற, (அதாவது : பெயரையுடைய),
அரவாயினன் - சர்ப்பமாகப் பிறந்தான், எ-று. (109)
வேறு
333. அரசன் மேற்கரு விற்பொரு ளாசையின்
மரீஇய மாயத்தின் மந்திரி மற்றிந்த
திரியக் காயினன் றீயவிச் செய்கையை
மருவு வாருள ரோமதி மாந்தரே.
(இ-ள்.) அரசன்மேல்
- இராஜாவின் பேரிலேற்பட்ட, கருவில் -
த்வேஷத்தினாலும், பொருளாசையின் - பொருள்களின் மேலுண்டாகிய
ஆசையினாலும், மரீஇய - மருவிய (அதாவது சேர்ந்திரா நின்ற),
மாயத்தின் - மாயாச் சாரத்தினாலும், மந்திரி - ஸ்ரீபூதிமந்திரி, இந்த -
இப்படிப்பட்ட, திரியக்காயினன் - விலங்கு ஜாதியிற்
பிறந்தான்,
மதிமாந்தர் - புத்திவந்தர்களுள், தீய -
பொல்லாங்காகிய,
இச்செய்கையை - இப்படிப்பட்ட ராகத்வேஷ
மோககாரியத்தை,
மருவுவார் - சேர்பவாக்ள், உளரோ - உண்டோ, (இல்லை),
எ-று.
மற்று - அசை.
(110) |