நிறைந்து,  இலங்கும் விளங்குன்ற,  அதிங்கவனம் 
        - அதிங்கவனத்தில், 
        விரகில்  -  உத்சாகத்தினால், சென்று - போய், புக்கான் - புகுந்தான் 
        எ-று.                                                  (119) 
       
       343. விமலகாந் தார மென்னும் விலங்கலை யிலங்க வேறி 
             யமலமா யிலங்குஞ் சிந்தை யருந்தவன் வரதன் மாவின் 
             கமலமா யிலங்கும் பாதம் கைதொழு திறைஞ்சி வாழ்த்தித் 
             திமிரமாம் வினைக டீரத் திருவற மருள்க வென்றான். 
       
           (இ-ள்.)  (அவ்வாறு 
        சென்ற அவன்) விமலகாந்தார மென்னும் - 
        விமல    காந்தார    மென்னும்   பெயரையுடைய,    
        விலங்கலை - 
        (அவ்வனத்தில்  உள்ள)  பர்வதத்தில், இலங்க - தன் அழகு விளங்க, 
        ஏறி  -  ஏறிப்போய்,  அமலமாய்  -  நிர்மல  காரமாகி, 
        இலங்கும் - 
        விளங்கும், சிந்தை - தியானத்தையுடைய, அரும் - அரிதாகிய, தவன் 
        - தபசையுடையவனான,   வரதன்மாவின்    -  வரதர்ம  
        னென்னும் 
        பெயரையுடைய  முனிவரனது,  கமல  மாய் - தாமரை புஷ்பமாகவே, 
        (அதாவது   அதைப்போல),   இலங்கும்   விளங்குகின்ற,   
        பாதம் - 
        பாதங்களை,   கைதொழுது  -  கைகுவித்து,  இறைஞ்சி  - 
        வணங்கி, 
        வாழ்த்தி   -  ஸ்தோத்திரம்   பண்ணி,  திமிரமாம் 
        - அஞ்ஞானாந்த 
        காரத்தனாலாகிய,  வினைகள் - கர்மங்கள்,  தீர - நீங்க, திருவறம் - 
        அழகிய  ஜின  தர்மத்தை,  அருள்க - சொல்லக் கடவீராக, என்றான் 
        - என்று அவரிடம் கேட்டான், எ-று.                        
        (120)  
       344. அறிவுநற் காட்சி காந்தி சாந்திநல் லடக்க மைந்து 
             பொறிகளிற் செறிவு குத்தி சமிதியும் பொருந்தி 
        யாசை 
             வறுவிய மனத்துத் தண்டங் காரவஞ் சன்னை வீந்த 
             உறுதவ னுரைக்க லுற்றா னுவந்தவன் கேட்க லுற்றான். 
       
            (இ-ள்.)  (அவ்வாறு 
        கேட்டபோது) அறிவு - சம்மியக்ஞானமும், 
        நற்காட்சி  -  சம்மியக்  தரிசனமும், காந்தி  - சம்மியக் 
        சாரித்திரமும், 
        சாந்தி     -    உபசாந்தியும்    
        (அதாவது :    ப்ரசமம்   அல்லது 
        க்ஷமாபரிணாமமும்),   நல்லடக்கம்   -   நன்மையாகிய 
         ஸம்யமமும் 
        (அதாவது   பிராணி  ஸம்யமம்   ஆறும்  விஷய 
         ஸம்யம்  ஆறும்), 
        ஐந்துபொறிகளில்   செறிவு   -  பஞ்சேந்திரிய  விஷயங்களில் 
        ராகத் 
        வேஷமில்லாமையும்,   குத்தி   -   திரிகுப்தியும், 
          சமிதியும் - பஞ்ச 
        சமிதியும்,   பொருந்தி   -   ஆகிய  இவைகளில் 
        சேர்ந்து, ஆசை - 
        இகபரங்களில்  அன்னிய  திரவியா  பேட்சையை,  வறுவிய - நீக்கிய, 
        மனத்து   -   ஸ்வாத்மத்தியான   மனதையுடையவனும், 
          தண்டம் - 
        மனோவாக்  காயுதண்டங்களும், காரவம் - ரஸ  ரித்தி சாதுவென்னும் 
        திரிகாரவங்களும், சன்னை  -  ஆஹாரபய  பரிக்கிரகஸ்திரீ  என்னும் 
         
        சதுஸ்ஸன்னைகளும், வீந்த  -  நீங்கியவனுமாகிய, உறு - பெரிதாகிய, 
        தவன்   -  தபசையுடைய  வாதர்ம  முனிவன்,   உரைக்கலுற்றான் 
        - 
        சொல்லத்  தொடங்கினான், அவன்  - அப்பத்திரமித்திரன், உவந்து - 
        சந்தோஷித்து, கேட்கலுற்றான் - கேட்கத் தொடங்கினான், எ-று.  (121)   |