345. கருணையு மறிவு முண்டி யுறையுளு மீதல் காம 
             மருளிலா விறைவன் பாதம் சிறப்பொடு வணங்கன் மைய 
             லிருளறத் தெளிதல் வென்றோர்க் கிறைவன தறத்தைச் 
        சீல 
             மருவிநின் றொழுகல் மாற்றிற் சுழற்றிதீர் மருந்தி தென்றான்.  
           (இ-ள்.)   (அவ்வாறு 
           சொல்லத்   தொடங்கிய    முனிவன்) 
        கருணையும்  -  ஸ்தாவர  சங்கமாதி  சகல ஜீவன்கள் பேரில் 
        தயவும், 
        அறிவும்   -   ஞானத்திற்குக்  காரணமாகிய சாஸ்திரமும், 
         உண்டி - 
        பவித்திராஹாரமும்,   உதையுளும்   -  ஆவாஸமும்  ஆகிய 
         இந்த 
        நால்வகையாகிய தானங்களை, ஈதல்  -  பாத்திரமறிந்து கொடுத்தலும், 
        காம  மருளிலா -  ஆசையு  மயக்கமுமில்லாத,  இறைவன் - வீதராக 
        சர்வஜ்ஞனுடைய,  பாதம்  -  பாதங்களை, சிறப்பொடு - பூஜையோடு, 
        வணங்கல்    -    வணங்குதலும்,    வென்றோர்க்கு 
          -   இந்திரிய 
        ராகத்வேஷங்களை     ஜெயித்த     கணதராதி    
        முனிவர்களுக்கு, 
        இறைவனது .     தலைவனாகிய    ஸ்வாமியினால் 
          சொல்லப்பட்ட, 
        அறத்தை   -    ஜீவாதி   தத்துவ   தர்மத்தை, 
         மையல்  இருளற - 
        மயக்கமாகிய   இருள்   நீங்க,   தெளிதல்  -  
        தெளிவதும்,  சீலம் - 
        விரதங்களை,     மருவிநின்று    -    
        சேர்ந்துநின்று,    ஒழுகல் - 
        நடக்கின்றதும்,  (ஆகிய)  இது  -  இந்தத்  தானம் பூஜாஸம்மியக்த்வ 
        சீலங்கள்  பொருந்திய  தன்மை, மாற்றில்  - ஸம்ஸாரத்தில் 
        ஏற்படும், 
        சுழற்றி  -  சுழற்சியை,  தீர்  -  நீக்குகின்ற, மருந்து 
        - ஒளஷதமாகும், 
        என்றான் - என்று சொன்னான், எ-று.  
       346. வதங்கள்பன் னிரண்டு மேவி வையகத் துயிர்கட் கெல்லா 
             மிதஞ்செய்து வருந்தில் வெந்தீ யிடுவெண்ணெய் போன்றி ரங்கிச் 
             சிதைந்தின்னா தனசெய் தார்க்கு மினியவே செய்து சிந்தைக் 
             கதங்கடிந் தொழுக னல்லோர் கருணையைக் கொடுத்த லாமே.  
           (இ-ள்.)     
        (அவ்வாறு   சொல்லி    மேலும்)    நல்லோர் 
        - 
        ஸம்மியக்த்வத்தையுடையவர்கள்,   வதங்கள்   பன்னிரண்டு  மேவி 
        - 
        த்வாதச  விரதங்களைப்  பொருந்தி,  வையகத்  துயிர்கட்கெல்லாம் 
        - 
        இவ்வுலகிலுள்ள  சகல  ஜீவன்களுக்கும், இதஞ்செய்து - நன்மையைச் 
        செய்தும்,  வருந்தில்  - ஜீவன்கள் வருந்துமே யானால், வெந்தீயிடு - 
        வெப்பம்    பொருந்திய   அக்னியில்வைக்கப்பட்ட,    
        வெண்ணெய் 
        போன்று    -    வெண்ணெயானது    
        உருகுவதுபோல,   இரங்கி - 
        மனதிரங்கியும்,  சிதைந்து - அறிவு  கெட்டுக்  கோபித்து, இன்னாதன 
        - துன்பம்     தருபவைகளை,     செய்தார்க்கும் 
           -     தமக்குச் 
        செய்தவர்களுக்கும்,    இனியவே    -   
        நன்மைகளையே, செய்து - 
        செய்தும்,  சிந்தை - மனதில்,  கதம்  - கோபத்தை,  கடிந்து 
        - நீக்கி, 
        ஒழுகல்  -  நடத்தலும், கருணையை - ஜீவ தயவாகிய அபயதானத்த, 
        கொடுத்தல் ஆம் - கொடுப்பதாகும், எ-று.                   (123) 
       
       347. இங்கியல் மூட மென்னு மிருளினைத் துறந்து கொண்டு 
             வெங்கதிர் போலத் தோன்றி மெய்ம்மையை விளக்கி நிற்கு   |