158மேருமந்தர புராணம்  


 

 345. கருணையு மறிவு முண்டி யுறையுளு மீதல் காம
     மருளிலா விறைவன் பாதம் சிறப்பொடு வணங்கன் மைய
     லிருளறத் தெளிதல் வென்றோர்க் கிறைவன தறத்தைச் சீல
     மருவிநின் றொழுகல் மாற்றிற் சுழற்றிதீர் மருந்தி தென்றான்.

     (இ-ள்.)   (அவ்வாறு    சொல்லத்   தொடங்கிய    முனிவன்)
கருணையும்  -  ஸ்தாவர  சங்கமாதி  சகல ஜீவன்கள் பேரில் தயவும்,
அறிவும்   -   ஞானத்திற்குக்  காரணமாகிய சாஸ்திரமும்,  உண்டி -
பவித்திராஹாரமும்,   உதையுளும்   -  ஆவாஸமும்  ஆகிய  இந்த
நால்வகையாகிய தானங்களை, ஈதல்  -  பாத்திரமறிந்து கொடுத்தலும்,
காம  மருளிலா -  ஆசையு  மயக்கமுமில்லாத,  இறைவன் - வீதராக
சர்வஜ்ஞனுடைய,  பாதம்  -  பாதங்களை, சிறப்பொடு - பூஜையோடு,
வணங்கல்    -    வணங்குதலும்,    வென்றோர்க்கு   -   இந்திரிய
ராகத்வேஷங்களை     ஜெயித்த     கணதராதி    முனிவர்களுக்கு,
இறைவனது .     தலைவனாகிய    ஸ்வாமியினால்   சொல்லப்பட்ட,
அறத்தை   -    ஜீவாதி   தத்துவ   தர்மத்தை,  மையல்  இருளற -
மயக்கமாகிய   இருள்   நீங்க,   தெளிதல்  -  தெளிவதும்,  சீலம் -
விரதங்களை,     மருவிநின்று    -    சேர்ந்துநின்று,    ஒழுகல் -
நடக்கின்றதும்,  (ஆகிய)  இது  -  இந்தத்  தானம் பூஜாஸம்மியக்த்வ
சீலங்கள்  பொருந்திய  தன்மை, மாற்றில்  - ஸம்ஸாரத்தில் ஏற்படும்,
சுழற்றி  -  சுழற்சியை,  தீர்  -  நீக்குகின்ற, மருந்து - ஒளஷதமாகும்,
என்றான் - என்று சொன்னான், எ-று.

 346. வதங்கள்பன் னிரண்டு மேவி வையகத் துயிர்கட் கெல்லா
     மிதஞ்செய்து வருந்தில் வெந்தீ யிடுவெண்ணெய் போன்றி ரங்கிச்
     சிதைந்தின்னா தனசெய் தார்க்கு மினியவே செய்து சிந்தைக்
     கதங்கடிந் தொழுக னல்லோர் கருணையைக் கொடுத்த லாமே.

     (இ-ள்.)     (அவ்வாறு   சொல்லி    மேலும்)    நல்லோர் -
ஸம்மியக்த்வத்தையுடையவர்கள்,   வதங்கள்   பன்னிரண்டு  மேவி -
த்வாதச  விரதங்களைப்  பொருந்தி,  வையகத்  துயிர்கட்கெல்லாம் -
இவ்வுலகிலுள்ள  சகல  ஜீவன்களுக்கும், இதஞ்செய்து - நன்மையைச்
செய்தும்,  வருந்தில்  - ஜீவன்கள் வருந்துமே யானால், வெந்தீயிடு -
வெப்பம்    பொருந்திய   அக்னியில்வைக்கப்பட்ட,    வெண்ணெய்
போன்று    -    வெண்ணெயானது    உருகுவதுபோல,   இரங்கி -
மனதிரங்கியும்,  சிதைந்து - அறிவு  கெட்டுக்  கோபித்து, இன்னாதன
- துன்பம்     தருபவைகளை,     செய்தார்க்கும்    -     தமக்குச்
செய்தவர்களுக்கும்,    இனியவே    -   நன்மைகளையே, செய்து -
செய்தும்,  சிந்தை - மனதில்,  கதம்  - கோபத்தை,  கடிந்து - நீக்கி,
ஒழுகல்  -  நடத்தலும், கருணையை - ஜீவ தயவாகிய அபயதானத்த,
கொடுத்தல் ஆம் - கொடுப்பதாகும், எ-று.                   (123)

 347. இங்கியல் மூட மென்னு மிருளினைத் துறந்து கொண்டு
     வெங்கதிர் போலத் தோன்றி மெய்ம்மையை விளக்கி நிற்கு