350. புலைசுண்பா னுண்ட வுண்டி வலியினா லுயிரைப் போற்றின்
மலையினும் பெரிய வுண்டி வலியினா லுயிரைச் சால
நலியுமேல் நரகத் தாழ்த்து நடலைகள் படுமென் றாலிப்
புலைசுண்பார்க் குண்டி யீத னன்றுமா மன்று மாமே.
(இ-ள்.) புலைசுண்பான் -
மாம்ஸம் தின்பவன், உண்ட - புசித்த,
உண்டி வலியினால் - ஆகாரத்தினுடைய சத்தியினால், உயிரை
-
ஜீவன்களை, போற்றின் - தயவுவந்து ரக்ஷிப்பானேயாமாகில், (அதனால்
வரும் புண்ணியம்), மலையினும் பெரிய - தாதாவுக்குப் பர்வதத்தைப்
பார்க்கிலும், பெரியதாகும், உண்டி - ஆகாரம் புசித்த, வலியினால் -
சக்தியினால், உயிரை - ஜீவன்களை, சால - மிகவும், நலியுமேல்
-
வருத்துவானேயாமாகில், நரகத் தாழ்த்தும்
- நரகத்தில்
ஆழ்த்தும்படியான, நடலைகள் - பாபங்கள், படும் - தாதாவுக்கும்
உண்டாகும், (என்று சாஸ்திரம் கூறுகின்றது) என்றால்
- அது
இவ்வாறென்று சொல்லுமிடத்தில், இப்புலைசுண்பார்க்கு -
இந்த
மாம்ஸம் தின்பவர்களுக்கு, உண்டி - ஆஹாரத்தை, ஈதல் - தானஞ்
செய்வது, நன்றுமாம் - நல்ல தாகவுமாகும்,
அன்றுமாம் -
பொல்லாததாகவுமாகும், எ-று.
351. அகதிக ளறத்தி னின்றா ரரும்பிணி யாளர் மூத்தார்
குகதிகள் குருடர் மூகர் கொலைத்தொழில் மனத்து மில்லார்
அகல்கையி னேந்தி னோருக் கருளினா லீந்த வுண்டி
மகரிகை மலிந்த பூணோய் மத்திம தான மாமே.
(இ-ள்.) அகதிகள் - வறுமையுற்றவர்களும்,
அறத்தினின்றோர் -
விரதத்தோடு கூடப்பட்ட தர்மஸ்தர்களும், அரும் -
அரிதாகிய,
பிணியாள், வியாதியஸ்தர்களும், மூத்தார் - விருத்தர்களும், குகதிகள் -
நடக்கவியலாத முடவர்களும், குருடர் - அந்தகர்களும்,
மூகர் -
ஊமைகளும், கொலைத்தொழில் - ஜீவவதை செய்யும் தொழிலை,
மனத்துமில்லார் -
மனத்தினாலும் நினைக்காத
அஹிம்ஸாவிரதத்தையுடையவர்களும், அகல் - பிக்ஷைப்பாத்திரத்தை,
கையில் ஏந்தினோருக்கு - கையில் தரித்தவர்களும்
ஆகிய
இவர்களுக்கு, அருளினால் - தயவினால், ஈந்த - கொடுக்கப்பட்ட,
உண்டி - ஆஹாரமானது, மலிந்த - நிறைந்த, மகரிகை
- மகர
கண்டிகையென்னும், பூணோய் - ஆபரணத்தை யணிந்திரா நின்ற
பத்திரமித்திரனே!, மத்திம தானமாம் - மத்தியம
தானமாகும்,
எ-று. (128)
352. உறவியைப் பெரிது மோம்பி யொழுக்கத்தை நிறுத்தி யுள்ளம்
பொறிவழி படர்ச்சி நீக்கிப் பிறர்க்குநன் றாற்றிப் பொய்தீர்
நெறியினைத் தாங்கி நீங்கா வீட்டின்பம் விழைதல்
செய்யு
முறுதவர்க் கீந்த வெல்லா முத்தம தான மாமே. |