(இ-ள்.) 
         உறவியை - ஜீவன்களை, பெரிதும் - மிகவும், ஓம்பி - 
        பாதுகாத்து,  ஒழுக்கத்தை  -  ஸாமாயிகாதி  சாரித்திரத்த,  
        நிறுத்தி - 
        தன்னிடத்திலிருத்தி, உள்ளம் - மனமானது, பொறிவழி - பஞ்சேந்திரிய 
        வழிகளில்,  படர்ச்சி  -  செல்வத்தை,  நீக்கி - செல்ல  
        வொட்டாமல் 
        பரிகரித்து, பிறர்க்கு - அன்னியர்களுக்கு,  நன்றாற்றி - நன்மையையே 
        செய்து, பொய்தீர்  -  குற்றந்தீர்ந்த,  நெறியினை  - சன்மார்க்கமாகிற 
        இரத்தினத்திரயத்தை,  தாங்கி   -   தரித்து,  நீங்கா 
          -  ஒருகாலும் 
        நீங்குதலில்லாத, வீட்டின்பம்  -  மோக்ஷ  சௌக்கியத்தை, விழைதல் 
        செய்யும் - இச்சிக்கும், உறு - பெரிதாகிய,  தவர்க்கு - தவசையுடைய 
        மகா   முனிவரர்களுக்கு,  ஈந்த  வெல்லாம்  - கொடுக்கப்பட்டவைக 
        ளெல்லாம், உத்தம தானமாம் - உத்தம தானமாகும், எ-று.      (129) 
       
       353. ஊனொடு தேனுங் கள்ளு முவந்தவை பிறவு மீதற் 
             றானமென் றுரைத்துத் தம்மைக் கொன்றுயிர்க் கூனை யீவாா 
             தானமுந் தயாவு மெல்லாந் தாங்கண்ட வாறு காண்க 
             வீனமென் றாலுங் கேளா ரியல்புவே றுலகத் தாரே. 
       
           (இ-ள்.) ஊனொடு - மாம்ஸத்தோடு, 
        தேனும் - மதுவும், கள்ளும் 
        - கள்ளு  முதலாகிய அந்த ஜீவநிகாய வஸ்துக்களையும், உவந்தவை - 
        அவையல்லாமலும் ஏற்றுக்கொள்பவர் சந்தோஷிப்பவைகளான, பிறவும் 
        - இன்னம்   அனேக   வஸ்துக்களையும்,   ஈதல்   -   
        கொடுப்பது, 
        தானமென்று -  தானமாகு  மென்று,  உரைத்து - சொல்லி,  தம்மை 
        - 
        தங்களையும்,  கொன்று  -  கொலை  செய்து,  உயிர்க்கு 
        - அன்னிய 
        ஜீவர்களுக்கு,  ஊனை  -  மாம்ஸத்தை,  ஈவார் - கொடுப்பவர்களாற் 
        செய்யப்பட்ட, தானமும்  -  தானமும், தயாவும் - தயவும், எல்லாம் 
        - 
        ஆகிய  இவைகளையெல்லாம், தாங்கண்டவாறு  காண்க  -  
        தாங்கள் 
        கண்டபடியே  காண்க,  இயல்பு - இயற்கையானது, வேறு - வேறாகிய, 
        (அதாவது  ஸ்வபாவ  குணத்தை  [தத்துவ ஞானத்தை] யறிதலைவிட்டு 
        விபாவகுணத்தை    யடைந்து   அஞ்ஞானிகளாகிய),   
        உலகத்தார் - 
        இவ்வுலகத்திலுள்ளவர்கள்,      ஈனமென்றாலும்     -      
        இவ்வித 
        அயோக்கியமாகிய  தானம்  குறைவான காரியமென்று  சொன்னாலும், 
        கேளார் - கேட்கமாட்டார்கள், எ-று.  
       354. அனகமா யனந்த மாய குணம்புணர்ந்த தார்வ மாதி 
             தனையிலா தியல்பி னின்றான் றன்மையைத் தன்கண் வைத்து 
             நினைதலுக் கேது நல்ல சிறப்பது வினையை நீக்குங் 
             கனலிசேர் கனகந் தன்கண் காளத்தைக் கழற்று மாறே. 
       
            (இ-ள்.)   அனகமாய் 
           -   பாபரஹிதமாகி,  அனந்தமாய - 
        முடிவில்லாத, குணம்  -  ஞானாதி குணங்களை, புணர்ந்து - சேர்ந்து, 
        ஆர்வமாதி  -  ராகத் வேஷாதிகளின் கூட்டம்,  இலாது - இல்லாமல், 
        இயல்பின் - ஸ்வபாவத்தில், நின்றான் -   |