சொல்லு மெய்யு மறந்தனர் சோர்ந்தனர்
மல்லி யங்கு புயத்திரண் மைந்தரும்.
(இ-ள்.) (அவ்வாறு அரசன் வீழ்ந்த மாத்திரத்தில்) கல்லென் - கல்லென்கிற,
ஓசை - சப்தமானது, கடல் - சமுத்திரம்,
உடைந்திட்டென - கரையையுடைத்துப் புறப்பட்டது போல,
எல்லையின்றி - மட்டில்லாமல், எழுந்தது - (அரண்மனையில்)
உண்டானது, மல் இயங்கும் - மல்ல யுத்தத்தில் தேர்ந்து
விளங்காநின்ற,திரள் - திரண்ட,புயம் - புயங்களையுடைய, மைந்தரும்
- அரச குமாரர்களிருவரும், யாவரும் - அங்குள்ள மற்ற எவர்களும்,
சொல்லும் - வசனமும், மெய்யும் - சரீரமும், சோர்ந்தனர் -
சோர்ந்தார்கள், எ-று. (21)
378. இராம தத்தையு மின்னுயி ரன்பினால்
விராம முற்றதோர் மஞ்ஞையின் வீழ்ந்தனள்
கரா மறிக்கடல் சூழ்படிக் காவல
னிராமை யாற்பக லும்மிர வாயதே.
(இ-ள்.) (அப்போது) இராமதத்தையும் - இராமதத்தாதேவியும்,
இன் - இனிமையாகிய, உயிர் - உயிர்போன்ற, அன்பினால் -
ஆசையினாலே,விராமம் - ஆயுள்முடிவை, உற்றது - அடைந்ததாகிய,
ஓர் - ஒரு, மஞ்ஞையின் - மயில்போல,வீழ்ந்தனள் - வீழ்ந்தாள், கரா
- முதலைகள் தங்கியிருக்கின்ற, மறி - சுழலப்பட்ட, கடல்சூழ் -
சமுத்திரம் சூழ்ந்த, படிக்காவலன் - இப்பூமியைக் காக்கும்படியான
அரசன், இராமையால் - நல்ல நிலைமையாக இல்லாததனாலே, பகலும்
- பகற்பொழுதும், இரவாயது - இராத்திரிக்கு ஒப்பாகியது, எ-று.
விராமம்
- என்பதற்கு, அம்பு எனவும் பொருளுரைக்கலாம். (22)
379. கருட னாயவன் காலிலி கட்கெலாங்
கருட தண்டனென் பானக் கணத்திலே
மருவி மந்திர மோதவு மன்னனுக்
கிருள் பரந்துயி ரேகிய தேகலும்.
(இ-ள்.) காலிலிகட்கெலாம் - பாதமில்லாத சர்ப்பங்களுக்கெல்லாம், கருடனாயவன் - கருடனுக்குச் சமானமானவனாகிய,
கருடதண்டனென்பான் - கருடதண்டனென்னும் ஒரு
1காருடியானவன், அக்கணத்திலே - அப்பொழுது, மருவி
- சேர்ந்து,
மந்திரம் - கருடமந்திரத்தை, ஓதவும் - ஜெபிக்கவும், (தணியாமல்) மன்னனுக்கு -
அரசனுக்கு,இருள்பரந்து - கரியவிஷமானது வியாபித்து, ______________________________________________
1காருடி - கருடமந்திரம் கற்ற மந்திரவாதி.
|