190மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

லாம்,  இருமையும் -  தான் என்கிற  சுத்தாத்ம  திரவியமும்  அதன்
குணமாகிய   அனந்த    ஞானாதியும்   ஆன    குணிகுணங்களை,
ஒருமையாக்கி   -   அபேத   விவக்ஷையாக்கி,   யான்   -  இந்த
ஆத்மத்ரவியம்  நானே,  எனது  -  இந்த  அனந்த ஞானாதிகுணம்
என்னுடையதே,  என்ன  -  என்று பாவனைசெய்து ஸ்வானுபூதியாக
அறிய,   வினை   -   அஷ்டகர்மங்கள்,   நீங்கும்  -  ஆத்மனை
விட்டகலும்,  அன்றி - அப்படியல்லாமல், யாக்கை - எடுத்திராநின்ற
சரீரம், யான் - நானே, சுற்றம் - பந்துக்களாதியான சமூகம், எனது -
என்னுடையதே,  என்ன  -  என்று  உபசரிதா   னுபசரித அசத்பூத
வியவகாரமான   அசுத்த  பரிணாமத்தால்   எண்ண,  எண்வினைத்
தொடரும்  -  அஷ்டகர்மங்களின்   சேர்க்கையும்,   நீங்காது   -
ஆத்மனைவிட்டகலாது,    என்றான்    -    என்று    முனிவரன்
சொன்னான், எ-று. (56)

 413. என்றலு மெனதும் யானு மிவையென மயங்கிக் கீழ்நா
     ணின்றியான் கதிக ணான்கிற் சுழன்றன னெறி யறிந்த
     வின்றுநா னிவற்றி னீங்கா தொழிவனே லென்க ணீங்கா
     தொன்றினா லொன்று நில்லா தொழிகவித் தொடர்ச்சி
                                          யென்றான்.

    (இ-ள்.)  என்றலும் - என்று முனிவரன் சொல்லவும், எனதும் -
என்னுடையதும்,  யானும்  -  நானும்,  இவையென - முன்சொன்ன
பந்துக்களாதியும்   இச்சரீரமுமான  இவைகளேயென்று,  மயங்கி  -
(உபசரித அனுபசரித  அஸத்பூத நயங்களில்)  பிரமித்து,  கீழ்நாள் -
கடந்த நாட்களில், நின்று -  (சுத்த நிச்சய நயம் தெரியாமல்) நின்று,
யான் - நான், கதிகள்  நான்கில்  - சதுர்க்கதிகளில், சுழன்றனன் -
பிறப்பிறப்புக்களினாற்  சுழற்சி யடைந்தேன்,  நெறி  அறிந்த  - (நீர்
ஸ்வரூபங்களைச் சொல்ல அவற்றால்) நன்மார்க்கத்தினைத் தெளிந்த,
இன்று - இப்பொழுது, நான் - யான்,  இவற்றின் - இவற்றினின்றும்,
நீங்காதொழிவனேல்  -  விலகாமற்  போவேனாயின்,  என்கண்  -
ஆத்மனாகிய என்னிடத்தே, நீங்கா - அக்கருமங்கள் விலகமாட்டா,
ஒன்றினால் - (நான்  ஆத்ம குணங்களில்) பொருந்தினால், ஒன்றும்
- யாதொரு  வினையும்,  நில்லாது  - நிற்கமாட்டாது, (ஆகையால்),
இத்தொடர்ச்சி  -  இந்த  அன்னியத்  திரவியப்)  பற்று,  ஒழிக  -
என்னைவிட்டு  நீங்குவதாக,  (அதாவது : அது என்னைவிட்டு நீங்க
நான் சுத்த ஜீவஸ்வரூப பாவனையாகிய தன்மையைக் கொள்வேனாக),
என்றான் - என்று சிம்மச்சந்திரவாசன் சொன்னான், எ-று. (57)

 414. நெருப்பிடைக் கிடந்த செம்பிற் பட்டநீர்த் துள்ளி போலும்
     விருப்பிடைக் கிடந்த வுள்ளத் தெழுந்தவே கத்தி னின்பந்
     திருத்தியைச் செய்யு மென்று புலத்தினைச் செறிய நிற்றல்
     நெருப்பைநெய் தெளித் தவிப்பா னெழுந்தவ னினைப்பி
                                                னொன்றே.