பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 197


Meru Mandirapuranam
 

   உவத்தல்காய்த லின்றியொத்து நின்றசித்த மெய்த்தவன்
   சுவைப்பரித்தி யாகமாகு மாதவத்தொ டொன்றினான்.

   (இ-ள்.)  (பின்னரும்)  எவற்றினும்  - எந்த   விஷயங்களிலும்,
உவத்தல் -  சந்தோஷித்தலும்,  காய்தல்  - வெறுத்தலும், இன்றி -
இல்லாமல்,  ஒத்துநின்ற - சமத்துவிபாவத்தோடு கூடி நின்ற, சித்தம்
- மனதையுடைய,  மெய் - உண்மையாகிய, தவன் - தபஸையுடைய
சிம்மச்சந்திர  முனிவரன்,  நவைக்கெலாம்  - துன்பத்திற்கெல்லாம்,
இடம் - ஸ்தானமானது,  இதென்று  - இதுவேயாகுமென்று நாவதன்
புலத்தினில்  -  ரஸனேந்திரிய  விஷயத்தினால்,  சுவைக்கண்   -
ரஸங்களின்  மேல்,  மேவல்  -  மனம்  பொருந்துவதை, விட்டு -
விடுத்து,  அறத்துறந்து  -  முழுதும் நீங்கி, நின்று - அந்நிலையில்
நின்று,    சுவைப்பரித்தியாகமாகும்  -   ரஸபரித்தியாக   மென்று
சொல்லப்படும்,  மா - பெரிய,  தவத்தொடு   - பாஹியதபத்துடன்,
ஒன்றினான் - பொருந்தினான், எ-று. (70)

427. கவந்தமோரி கூகைபேய் நிவந்த காடு பாழக
    முவந்தியானை வாளரி யுழுவைநின் றுழல் வனங்
    குவிந்தரவு வெம்புலி குமிறுமால் வரைமுழை
    யுவந்திராச சீயமொன்று போலவே றுறைந்தனன்.

    (இ-ள்.)(அவ்வாறு பொருந்தி) கவந்தம் - தலையற்றவுடல்களும்,
ஓரி  -  குள்ளநரிகளும்,  கூகை  -  கோட்டான்களும்,  பேய்  -
பைசாசங்களும்,  நிவந்த  -  மிகுதியாகிய,  காடு - சுடுகாட்டையும்,
பாழகம் - பாழ்மனைகளையும்,  உவந்து - சந்தோஷித்து, (அவற்றில்
தங்கியும்),  யானை  -  யானைகளும்,  வாள் -  பிரகாசமான நிறம்
பொருந்திய,  அரி -  சிம்மங்களும், உழுவை - புலிகளும், நின்று -
நிலைபெற்று,  உழல் -  திரிகின்ற, வனம் - வனத்தையும், குவிந்து -
கூட்டமாகி, அரவு - சர்ப்பங்களும்,  வெம் - கொடுமையான, புலி -
புலிகளும்,  குமிறும்  -  சீறிமுழங்குகின்ற,  மால் - பெரிய, வரை -
பருவதங்களிலுள்ள,  முழை -  குகைகளையும்,  உவந்து  - விரும்பி
அவற்றில்  தங்கியும்,  இராசசீயம்  -  அரசசிங்கம், ஒன்று போல -
ஒன்றைப்போல,    வேறு  -  தனியாக,  உறைந்தனன்  -  அந்தச்
சிம்மச்சந்திர   முனிவரன்      தங்கினான்  ( அதாவது   விவிக்த
சையாஸனமென்னும் தபஸைப் பொருந்தினான்), எ-று. (71)

 428. வேனல்வெம்பு கான்மலை வெயின்னிலையின் மேவியும்
     வானமாரி சோருநாண் மரம்முதன் மருவியும்
     ஊனுருக்கும் வன்பனிக் கடற்புறத்து வெள்ளிடைக்
     கானயானை போலமூன்று காலயோகு தாங்கினான்.