சிறப்புடை யறத்தவர்க் கெதிரெழுச்சி யாதியித்
திறத்தநால் விநயமும் சிறந்துமா தவஞ்செய்தான்.
(இ-ள்.) (அதன் மேல்) பெறற்கரிய - பெறுதற்கரிய, காட்சி -
சம்யக் கரிசனமும், மெய்யுணர்ச்சி, சம்யக்ஞானமும்,
நல்லொழுக்கின்மேல் -சம்யக் சாரித்ரமுமாகிய இந்த ரத்னத்ரயங்களின்
பேரில், இறப்பெய்தாமை - விடுதல் இல்லாமையும், மெய் -
சரீரத்தினாலும், மொழி - வசனத்தினாலும், மனத்து - மனத்தினாலும்,
உழந்து - பொருந்தி,இறைஞ்சுதல் - வணங்குதலாகிய தரிசன விநயம்
ஞானவிநயம் சாரித்ரவிநயமும், சிறப்புடை - மேன்மையையுடைய,
அறத்தவர்க்கு - அந்த ரத்னத்ரயத்தில் வர்த்தியா நின்றவர்களுக்கு,
எதிரெழுச்சி - எதிர்கொண்டு வணங்குதலும், ஆதி - முதலாகிய,
இத்திறத்த - இப்படிப்பட்ட, நால்விநயமும் - நான்கு வகையான
விநயங்களும், சிறந்து - தன்னிடத்தே சிறப்பாக வளர, மா -
பெரிதாகிய, தவம் - இந்த விநயதபத்தையும், செய்தான் -
இச்சிம்மச்சந்திர முனிவன் இயற்றினான், எ-று. (74)
431. பெருத்த நோன்பு வன்பிணிகள் பீடைமூ விபோகமாந்
திருத்தமேவி னார்கள் தியான நல்வதத்தொ டொன்றினார்
விருத்தர் வாலர் மெல்லியா ரறத்தைமேவி நின்றவர்
வருத்த நீக்கி யோம்புவையா வச்சமு மருவினான்.
(இ-ள்.) (அவ்வாறியற்றியதோடு) பெருத்த - பெரிதாகிய,
(அதாவது சம்யக்துவ பூர்வமான), நோன்பு - நோன்பும், வன்பிணிகள்
- கொடுமையான வியாதிகளும், பீடை - மற்றும் துன்பங்களும்,
மூவியோகமாம் - திரிகால யோகங்கள் சேர்ந்த, திருத்தம் - திருந்திய
தபஸும், (ஆகிய இவற்றை),மேவினார் - அடைந்தவர்களும், தியானம்
- தர்மத்தியான சுக்கிலத்தியானமும், நல் - நன்மையாகிய, வதத்தோடு
- அணுவிரத குணவிரத சிக்ஷாவிரத மஹாவிரதங்களும் ஆகிய
இவற்றுடனே, ஒன்றினார் - கூடிய பேர்களும், விருத்தர் -
விருத்தாப்பியர்களும், வாலர் - பாலவயதுடையவர்களும், மெல்லியார்
- சரீர சக்தியற்றவர்களும், (அல்லது ஸ்திரீ ஜாதியாரும்), அறத்தை -
சம்யக்துவத்தில் கூடிய தர்மத்தை, மேவி நின்றவர் - பொருந்தி
நின்றவர்களும், (ஆகிய இவர்களுடைய), வருத்தம் - ஏதோ கர்ம
வசத்தால் நேரிட்ட உபசருக்கங்களை, நீக்கி - தனது குணத்துக்கும்
அழிவுவராமல் பரிகரித்து, ஓம்பும் - இவர்களை உபசரிக்கின்ற,
வையாவச்சமும் - வையா விருத்தியமென்னும் அப்யந்தா தபஸையும்,
மருவினான் - சிம்மச்சந்திர முனிவரன் சேர்ந்தான், எ-று. (75)
வேறு.
432. யாக்கைக்க ணிச்சை நிற்கு மெழுத்தின்மேற் பழுத்த சொல்லை
வாக்குநின்றுமிழு மச்சொல் வசத்ததாஞ் செவியு முள்ளம்
|