மிருதுவான நடையையுடைய ஸ்திரீமார்களுக்கு,
அனங்கனாம் -
மன்மதனாகிய, மன்னர் மன்னவன் -
இராஜாதி இராஜனான,
வைசயந்தன் - வைசயந்தனென்னும் பெயருடையவனாகும், எ-று. (41)
42. ஆறு தீநய மகன்ற காட்சியான்
ஆறு நன்னய மமர்ந்த மாட்சியா
னாறு தொல்பகை யடர்த்த சூட்சியா
னாறி லொன்றுகொண் டகன்ற வேட்கையான்.
(இ-ள்) ஆறு - ஆறுவிதமாகிய,
தீநயம் - மித்தியா நயங்களை
(விட்டு), அகன்ற - நீங்கிய, காட்சியான் - தர்சனத்தை யுடையவன்;
ஆறு - ஆறு விதமாகிய, நன்னயம் - நன்னயங்கள், அமர்ந்த
-
பொருந்திய, மாட்சியான் - பெருமையை யுடையவன்;
ஆறு
தொல்பகை - பழமையான உட்பகையாறினையும், அடர்த்த - ஜெயித்த,
சூட்சியான் - உபாயத்தை யுடையவன்; ஆறிலொன்று கொண்டு
- குடிகளிடத்தில் ஆறிலொரு கடமை வரி வாங்கி,
அகன்ற -
நீங்கிய, வேட்கையான் -
ஆசையையுடையவன் (அதாவது
பேராசை யில்லாதவன்), எ-று.
நயங்களின் விவரங்கள் 6-வது சருக்கத்தில்
காணப்படும். (42)
43. கற்ப கமவன் கருதிற் றீதலால்
சொற் பொருளறி சுருதி மாக்கடல்
மற்பு யத்தினான் மால்வ ரைமலைக்
கொற்ற வர்க்கெலாங் கூற்ற னொக்குமே.
(இ-ள்) அவன் -
அம்மன்னன், கருதிற்று - யாசக ஜனங்களால்
வேண்டியவைகளை, ஈதலால் - கொடுக்கிறதினால், கற்பகம் - கற்பக
மரத்திற்குச் சமானமாவன்; சொல் - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட,
பொருள் - கொருள்களை, அறி - அறிகின்ற, சுருதி
- சாஸ்திர
வுணர்ச்சியில், மாக்கடல் - பெரிதாகிய சமுத்திரமாவன்; மல் - மல்ல
யுத்தஞ்செய்யும், புயத்தினால் - தோளினால், மால் - பெரியதாகிய,
வரை - பர்வதமாகும், மலை - மாறுபட்டுப் போர்
செய்கின்ற,
கொற்றவர்க்கெலாம் - (சத்துரு) இராஜாக்களுக்கெல்லாம், கூற்றன் -
எமராஜனையும், ஒக்கும் - நிகர்ப்பான், எ-று.
(43)
44. சூட்சி யாற்பகை சுருக்க லல்லது
வாட்செய் போரிலன் வான்சொ லின்றிமண்
ணாட்சி யாலிசை கேட்ட வசுணமாத்
தாட்சி போல்வையந் தானி றைஞ்சுமே. |