200மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

  நோக்குமப் பொருளின் மெய்ம்மை நுகர்ந்தெழுந் தெளிவி வற்றை
  யாக்குநல் லொழுக்கிற் சால வருந்தவன் விரும்பிச் சென்றான்.

   (இ-ள்.)  (மேலும்)  யாக்கைக்கண்  - சரீரத்தினிடத்தே, இச்சை -
ஒரு பொருளின்மேலுண்டாகிய விருப்பமானது, நிற்கும் - நிலைபெறும்,
(அது விஷயமாக)   எழுத்தின்மேல்  -   அக்ஷரங்களின்  மேலதாய்
(அதாவது அக்ஷரங்களினாலே),  பழுத்த  -  கனிவு பெற்றுண்டாகிய,
சொல்லை - வசனத்தை,  வாக்கு - வாயானது, நின்று - நிலைபெற்று,
உமிழும் - வெளிப்படுத்தும்,   (அதாவது :  சொல்லும்), செவியும்  -
காதும், அச்சொல்வசத்ததாம் -  அந்த  வசனத்தின் வசப்பட்டதாகும்,
(அதாவது : அதற்கிசையும்), உள்ளம் - மனதானது, அப்பொருளின் -
அந்தப் பொருள்களினது, மெய்ம்மை - யதாத்மியத்தை,  நோக்கும் -
ஆராய்ந்து  பார்க்கும்  (அதாவது  : அறியும்),  தெளிவு  -  தரிசன
விசுத்தியானது,   நுகர்ந்து  -  அதனை  அநுபவித்து ( அதாவது  :
சுவானுபூதி ஞானத்தையடைந்து), எழும் - ஓங்கி நிலைபெற்று நிற்கும்,
இவற்றை -  இப்படி  ஏற்படும்  இவைகளையெல்லாம்,  ஆக்கும்  -
செய்விக்கும்,  நல் -  நன்மையாகிய, ஒழுக்கில் - ஸ்வாத்தியாயத்தில்
(அதாவது  -  சாஸ்திரம்படித்தலென்னும்  அப்யந்தரதபஸில்), சால -
மிகவும்,    அருந்தவன் -  அரிய  தபத்தைச்செய்யும்  இம்முனிவன்,
விரும்பி -  இச்சித்து,  சென்றான்  -  பிரவே  சித்தான் (அதாவது :
அதனை அனுஷ்டித்தான்), எ-று. (76)

 433. ஆர்த்தரவுத் திரத்த சிந்தை யறவெறிந் துயிரை மாற்றிற்
     பேர்த்துமுத் திக்கண் வைக்குந் தருமசுக் கிலத்தி யான
     மோர்த்துட னுள்ளம் வைத்தா னுதிர்ந்தன வினைகள் பின்னைப்
     பார்த்திப குமரன் சிந்தைப் பரமமா முனிவ னானான்.

    (இ-ள்.)    ( அதன்   மேல் )    ஆர்த்தரவுத்திரத்தசிந்தை  -
ஆர்த்தத்தியானம்         ரவுத்திரத்யான              மென்னும்
அசுபத்தியானங்களையுடைய சிந்தையை, அறவெறிந்து - பற்றில்லாமல்
முழுவதும் நீக்கி, உயிரை - ஜீவனை (அதாவது : ஆத்மனை),மாற்றில்
- சம்ஸாரத்தினின்றும்,    பேர்த்து   -     நீக்கி,   முத்திக்கண்  -
மோக்ஷத்தினிடத்தில்,    வைக்கும்   -    சேர்க்கும்படியான,  தரும
சுக்கிலத்தியானம் -   தருமத்தியானம்   சுக்கிலத்தியான  மென்கின்ற
சுபத்தியானங்களை,  ஓர்த்து -  நன்றாக  வறிந்து, உடன்  - உடனே,
உள்ளம் - மனதில்,  வைத்தான்  -  ஸ்தாபித்தான், பின்னை - பிறகு,
வினைகள் - சில  கர்மங்கள், உதிர்ந்தன -  நிர்ஜரையை அடைந்தன,
(அவ்வாறாகவே),  பார்த்திபகுமரன்  -   முன்  அரசகுமாரனாயிருந்த
இச்சிம்மச்சந்திரன், (இப்போது), சிந்தை  -  தியானத்தினால், பரமம் -
மேலான,    மா  -   பெருமை  பொருந்திய,   முனிவனானான்   -
யதீஸ்வரனானான், எ-று.

      ஆர்த்தத்தியானம் :- இஷ்டவியோகம், அனிஷ்டசம்யோகம்,
லாபஜம், ரோகஜம் என நான்கு வகைப்படும்.