வார்க்கடல் காமுலை யார் மகிட்சியிற்
போர்க்கடா யானையான் புரிந்து செல்லுநாள்.
(இ-ள்.) (அவ்வாறு சூழ) பார்த்திபர் - அநேக தேயத்தரசர்கள்,
தரு - கொடுக்கின்ற, திரை - பகுதியை, கொண்டு - கைக்கொண்டு,
பைம்பொன்னால் - பசுமையாகிய பொற்காசுகளினால், இம்மண்ணினை
- இப்பூமியில் மறைவாக வைக்கும்படியான பந்தோபஸ்துள்ள
நிலவறையாகிய தனது பாண்டாகார அறையை, ஆர்த்தி - நிரப்பி,
அமிர்தச் செப்பென - அமிர்தம் நிறைந்த செப்பென்று
சொல்லும்படியாக, வார்க்கு - இரவிக்கைக்கு, அடங்கா -
அடங்காதோங்கி யிருக்கின்றனவாகிய, முலையார் -
ஸ்தனங்களையுடைய ஸ்திரீமார்களினது, மகிழ்ச்சியில் -
காமராகத்தினாலாகிய சந்தோஷத்தில், புரிந்து - விரும்பி, போர் -
யுத்தத்தைச் செய்யும், கடாயானையான் - ஆண் யானையையுடைய
அவ்வரசன், செல்லுநாள் - அவ்வாறு சென்று
கொண்டிருக்குங்காலத்தில், எ-று. (89)
446. கண்மிசை யவனையான் கண்டு காவல
விண்மிசை யின்பமும் வேந்தர் செல்வமும்
புண்ணிய மிலாதவர்க் கில்லை பூமக
ளெண்ணுவ துஞ்செயா ளென்றி யம்பினேன்.
(இ-ள்.) கண்மிசை - எனது கண்ணினால், யான் - நான்,
அவனைக் கண்டு - அப்பூர்ணசந்திர குமாரனைப் பார்த்து, காவல -
அரசகுமாரனே!, விண்மிசை - தேவர் லோகத்தில் ஏற்படும், இன்பமும்
- சுகமும்,வேந்தர் செல்வமும் - பூமியிலுள்ள இராஜாக்களின் சம்பத்து
முதலானவைகளும், புண்ணியம் - பூர்வத்திற் செய்யப்பட்ட புண்ணிய
கர்மம், இல்லாதவர்க்கு - இல்லாதவர்களுக்கு, இல்லை -
உண்டாவதில்லை (அதுவல்லாமலும்), பூமகள் - லக்ஷ்மிதேவியும்
(அல்லது பூமிதேவியும்), எண்ணுவதும் - அவர்களை நினைத்தலும்,
செய்யாள் - செய்யமாட்டாள், என்று இயம்பினேன் - என்று
சொன்னேன், எ-று.
மிசை - ஏழனுருபு; இஃதுருபுமயக்கம்;
மூன்றனுருபு ஏழனுருபாக
மயங்கி வந்தது. (90) 447. உருவமு மழகுநல் லொளியுங் கீர்த்தியும்
செருவிடை வெல்வலத் திறலுஞ் சிந்தைசெய்
பொருளவை வருதலும் போக மும்நல்ல
திருவுடை யறத்தது செய்கை யென்றனன்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும்) உருவமும் - ரூபமும்,
அழகும் - வனப்பும், நல் - நல்ல, ஒளியும் - பிரகாசமும், கீர்த்தியும்
- புகழ்ச்சியும்,
|