214மேருமந்தர புராணம்  


 

460. அருந்தவ னருளி னாலப் பத்திர மித்தி ரன்றான்
     றிருந்திய குணத்து நின்பாற் சீயசந் திரனென் றானேன்
     வருந்துநுண் ணிடையி னாளவ் வாருணி வந்துன் காதற்
     பொருந்திய புதல்வ னாயப் பூரசந் திரனென் றானாள்.

     (இ-ள்.)  அருந்தவன்   -   அரிதாகிய   தபசையுடைத்தாகிய
வரதர்மனென்னு  முனிவரனது,    அருளினால்   -      தயவினால்,
அப்பத்திரமித்திரன்    தான்     -  அந்தப்  பத்திரமித்திரனென்கிற
செட்டியான    நானே,    திருந்திய   -   திருத்தமாகிய, குணத்து -
குணத்தையுடைய,   நின்பால்   -  உன்னிடத்தே, சீயசந்திரனென்று -
சிம்மச்சந்திரனென்று     பெயர்   கூறப்பட்டவனாய்,    ஆனேன் -
புத்திரனாகப்    பிறந்தேன்,    வருந்து   -   வருந்துகின்ற, நுண் -
மெல்லிதாகிய, இடையாள் - இடையையுடையவளாகிய, அவ்வாருணி -
அந்த   வாருணியென்னும்  பிராம்மண  புத்திரி, வந்து - வந்து, உன்
காதல்  - உனதாசையால், பொருந்திய - பொருத்தமாகிய, புதல்வனாய்
- மற்றொரு   புத்திரனாகி,     அப்பூரசந்திரனென்று   -    அந்தப்
பூர்ணச்சந்திரனென்று பெயர் கூறப்பட்டு, ஆனாள் - பிறந்தாள்,
எ-று.                                                   (7)

வேறு.

461. ஆதலா லவன்க ணீங்காக்
    காதலை யாயி னாய் நீ
    போதுலா மலங்க லானுங்
    கோதிலாக் குணத்த னாமே.

     (இ-ள்.) ஆதலால் - ஆகையால், (அதாவது : அவனோடுனக்கு
முற்பவ  ஸம்பந்தம்  ஏற்பட்டிருந்ததாகையால்), நீ - நீ, அவன்கண் -
அக்குமாரனிடத்து,  நீங்கா    -    நீங்காத,    காதலையாயினாய் -
ஆசையையுடையவளானாய்,    போதுலாம்    -   புஷ்பங்கள் தங்கி
அசையாநின்ற,   அலங்கலானும்  - மாலையையணிந்த அக்குமாரனும்,
கோதிலா    -    குற்றமில்லாத,       குணத்தன்         ஆம் -
குணத்தையுடையவனாவான், எ-று.                            (8)

வேறு.

462. வினையெனுங் குயவ னம்மை வேண்டுரு வியற்றல் கண்டாய்
     அனகனா முருவந் தன்னைப் பெண்ணுரு வாக்கி யங்கே
     மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி
     நினைவினான் முடித்து நின்றார் நீதியார் கடக்க வல்லார்.

     (இ-ள்.)வினையெனும் - கர்மமென்று சொல்லப்பட்ட, குயவன் -
குசவன்,   நம்மை  -   ஆத்மராகிய நம்மை, வேண்டுருவு - இச்சித்த
உருவங்களாக, இயற்