முனிவன் போன்று, கருணை வைத்து - தயவை மனதிலே தாங்கி,
எவ்வுயிரையும் ஸகல ஜீவன்களையும், ஓம்பிற்று - இரக்ஷித்தது,
எ-று. (21)
475. பொய்கொலை களவு காமம் புலைசுதேன் கள்ள கற்றி
மெய்யுறத் திசையி னோடு பொருளினை வரைந்து மேனி
நையினும் வதங்க ணையா வகையினா னாக ராசன்
சய்யமா சய்ய மத்திற் றலைநின்றார் போலச் சென்றான்.
(இ-ள்.) (மேலும்) பொய் - அசத்தியமும், கொலை -
ஹிம்சையும், களவு - ஸ்தேயமும், காமம் - ஆசையும், புலைசு -
மாமிசம் பொசித்தலும், தேன் - மதுபானம் பண்ணுதலும், கள் - கள்
குடித்தலும், (ஆகிய இவ்வேழு துச்சாரித்திரங்களையும்) அகற்றி -
நீக்கி, மெய்யுற - சத்தியம் பொருந்த, (அதாவது : ஸத்தியம்,
அஹிம்சை, அஸ்தேயம், விராகம் இவைகள் வந்து கூடி மது மத்திய
மாம்ஸ நிவிருத்தியாக), திசையினோடும் - திக்விரதத்தோடும்,
பொருளினை - பரிக்கிரக வஸ்துக்களை, வரைந்து - மட்டுப் பண்ணி,
மேனி - சரீரமானது, நையினும் - நைந்தாலும், வதங்கள் - விரதங்கள்,
நையாவகையினால் - குறையாத விதத்தினாலே, 1நாகராசன்
-
இவ்வியானை யரசன், சய்யமாசய்யமத்தில் - தேச
சம்யதகுணஸ்தானத்தில், தலைநின்றார் போல - முதன்மையாக நின்ற
விரதீகர் என்னும் இரண்டாநிலை ஸ்ரீராவகர் போல, சென்றான் -
இவற்றின் வழியிற் பிரவேசித்தவனாய் ஒழுகினான், எ-று. (22)
476. உவர்ப்பொடு வெறுப்பி னொன்றி யுடம்பொடு புலங்க டம்மேற்
றுவர்ப்பசை நான்கு நீங்கிச் சொன்னபன் னிரண்டு முன்னிச்
சர்ச்செய்கை யின்றிச் சித்தஞ் சாந்தியி னன்மைதீமைக்
குவத்தல்காய் வின்றிப் பக்சந் திங்கணோன் பொன்றிச் சென்றான்.
(இ-ள்.) (மேலும் அவன்) உடம்பொடு புலங்கள் தம்மேல் -
இந்தச் சரீரத்தோடு பஞ்சேந்திரிய விஷயங்களின் மேலும்,
உவர்ப்பொடு - அருவருப்புடன் (அதாவது : சரீரத்தின்மேல் அசுசிபாவத்துடன்), வெறுப்பினொன்றி - இந்திரிய விஷயங்களில்
ஏற்படும் வைராக்கியத்திலும் பொருந்தி, துவர்ப்பசை நான்கு நீங்கி -
குரோத மான மாயா லோபமென்னும் சதுஷ்கஷாயங்களினின்றும்
விலகி, சொன்ன - ஆகமத்திற் சொன்ன, பன்னிரண்டும் உன்னி -
துவாதசானுப் பிரேட்சைகளை பாவித்து, சவர்ச்செய்கை - கெட்ட
நடத்தைகள், இன்றி - இல்லாமல், சித்தம் - மனதில், சாந்தியின் -
உபசாந்த பரிணாமத்தினோடு, நன்மை தீமைக்கு -சுகதுக்கங்களுக்கு,
உவத்தல்காய் வின்றி - ஹர்ஷவிஷாதமின்றி, பக்
___________________________________________________________
1யானையை
உயர்திணையாகக் கூறியது சிறப்பினால் வந்த பால்
வழுவமைதியெனப்படும். |