கடகமும் - அஸ்தகங்கணமும், கழலும் - வீரகண்டயமும், பட்டும் -
பட்டு வஸ்திரங்களும், கலாபமும் - (இடையணியாகிய)
மேகலாபரணமும், வீழுநூலும் - மார்பில் தொங்குகின்ற பூணூலும்,
உடன் - தன்னுடனேயே, இயல்பாகி - இயற்கையாக, தோன்றி -
உண்டாகி, ஒளியுமிழ்ந்து - பிரகாசத்தை வீசி, இலங்கும் - விளங்கும்,
மேனி - சரீரம், படரொளி - மிகுதியாகப்படர்ந்த ஜோதியை, பரப்ப -
பரவுதல் செய்ய, மஞ்சில் - படுக்கை மெத்தையின்பேரில், பருதியின் -
சூர்யன்போல, இருந்தபோழ்தில் - இருந்த காலத்தில், எ-று. (30)
484. காரென மலர்கள் மாரிக் கற்பக மரங்கள் வீழ்த்த
வாரணி முரச மெங்கும் முழங்கநந் தனவ னத்தில்
வேரியுந் தாது மேந்தி மந்தமா ருதங்கள் வீசச்
சீரணி கொங்கை யாருந் தேவருஞ் சென்று சேர்ந்தார்.
(இ-ள்.) (அவ்வாறு அத்தேவன் பிறந்து மெத்தையில்
எழுந்துட்கார்ந்த காலத்தில்) காரென - மழையைப் பொழியும்
மேகத்தைப்போல, கற்பக மரங்கள் - அவ்விடத்தி லிருக்கும்
கற்பகவிருட்சங்களானவை, மலர்கள் - புஷ்பங்களாகிற, மாரி -
மழையை, வீழ்த்த - சொரிய, எங்கும் - அத்தேவலோகமெங்கும், வார்
- இறுக்கிக்கட்டப்பட்ட வாரையுடைய, அணி - அழகிய, முரசம் -
பேரிகைகள், முழங்க - சப்திக்க, நந்தனவனத்தில் -
புஷ்பவனத்தினின்றும், வேரியும் - வாசனைகளையும், தாதும் -
பூந்தாதுக்களையும், ஏந்தி - தரித்து, மந்தமாருதங்கள் -
இளங்காற்றுக்கள், வீச - எப்பக்கமும் உலாவ, சீரணி - சிறப்போடு
கூடிய ஆபரணாதிகளையணிந்த, கொங்கையாரும் -
ஸ்தனங்களையுடைய தேவமாதர்களும், தேவரும் - ஸாமான்ய
தேவர்களும், சென்று - இந்த ஸ்ரீதர தேவனிடத்தில் போய், சேர்ந்தார்
- அடைந்தார்கள், எ-று. (31)
485. எத்திக்கும் பார்த்தி தென்னோ யாவரோ யான்பி னாரோ
சித்தத்துக் கினிய தேசம் யாரதோ வென்றி ருந்து
தத்துறும் போழ்தி லந்தப் பவத்தைச்சார்ந் தெழுந்த வோதி
கைத்தலப் படிகம் போலக் கண்டது கருதிற் றெல்லாம்.
(இ-ள்.) எத்திக்கும் - (அப்போது ஸ்ரீதரதேவன்) நாற்றிசையும்,
பார்த்து - நோக்கி, இது - இங்குத்தோற்றுவது, என்னோ - என்னவோ,
யாவரோ- (இவ்விடத்திலிருக்கப்பட்டவர்களெல்லாம்) எவர்களோ, பின்
- பிறகு, யான் - நான், ஆரோ - எவனோ, சித்தத்துக்கு - மனத்துக்கு,
இனிய - இனிமையாகிய, தேசம் - இந்த க்ஷேத்திரம், யாரதோ -
யாருடையதோ, என்று - என்று நினைத்து, இரந்து - தான்
அவ்விடத்திலேயே யிருந்து, தத்துறும் போழ்தில் - மனந்ததும்பிப்
பிரமிக்கின்ற காலத்தில், அந்தப் பவத்தைச் சார்ந்து - அத்தேவப்
பிறப்பை |