வேறு.
488. வென்றி யுந்திரு வும்பர மாயுவு
மொன்றி வையக முள்ளள வுஞ்செல்க
என்று சொல்லி யிறைஞ்சிய வானவர்
நின்று பின்செயு நீதிக ளோதினார்.
(இ-ள்.) வென்றியும் - வெற்றியும், திருவும் - தேவஸம்பத்தும்,
பரமாயுவும் - உத்கிருஷ்டாயுஷ்யமும், ஒன்றி - பொருந்தி,
வையகமுள்ளளவும் - இந்த லோகமுள்ளவரையில், செல்க - இந்த
ஸ்ரீதர தேவனுக்கு நடப்பதாக, என்று சொல்லி - என்று ஸ்துதிகளைச்
சொல்லி, இறைஞ்சிய - வணங்கிய, வானவர் - அத்தேவர்கள், நின்று -
ஸ்ரீதர தேவனெதிரில் நின்று, பின் - பிறகு, செயும் - அத்தேவனால்
செய்யும்படியான, நீதிகள் - வரிசைக்கிரமங்களை, ஓதினார் - சொல்லத்
தொடங்கினார்கள், எ-று. (35)
489. மஞ்ச னஞ்சமைத் தார்மதி போன்முகத்
தஞ்சொ லாரது முன்ன மமர்ந்துநீ
பஞ்ச காயம் பணித்த பிரானடிக்
கஞ்ச லிசெய் தமர்ந்த சிறப்புனி.
(இ-ள்.) (அவ்வாறு தொடங்கி அத்தேவனை நோக்கி,
ஸ்ரீதரதேவனே!) நீ - நீ, மஞ்சனஞ்சமைத்து - முதலில்
திருமஞ்சனத்தை ஏற்படுத்திக்கொண்டு, (அதாவது : திருமஞ்சன நீரில்
ஸ்நானம் பண்ணிப் பிறகு), ஆர்மதிபோல் - (ஒளி நிறைந்த) சம்பூர்ணச்
சந்திரன்போன்ற, முகத்து - முகத்தையுடைய, அம் - அழகிய,
சொலாரது - வசனத்தையுடைய தேவிமார்களினது, முன்னமமர்ந்து -
எதிரில் இருந்து அவர்களுக்குக் காட்சி கொடுத்து, (அதன்பின்),
பஞ்சகாயம் - பஞ்சாஸ்தி காயங்களை, பணித்த - பவ்விய
ஜீவர்களுக்குபதேசித்த, பிரான் - ஸர்வஜ்ஞனுடைய, அடிக்கு -
பாதங்களுக்கு, அஞ்சலிசெய்து - வணக்கஞ்செய்து, அமர்ந்த சிறப்பு -
பொருந்திய பூஜாஸ்துதி முதலாகிய மஹிமைகளை, உன்னி -
நினைத்துச் செய்து, எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (36)
490. தாவி லாத்தவத் தின்பய னாகிய
தேவர் தந்தொகை செய்வ தறிந்துபின்
னாவி னோசை நரம்பி னெழுகுரற்
றாவி லாவி லயம்பயில் சாலைகாண். |