228மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  தாவிலா - தாழ்வில்லாத,  தவத்தின் - தபத்தினுடைய,
பயனாகிய   -   பலனாகிய,  தேவர் தந்தொகை - தேவஸமூஹங்கள்,
செய்வது  - செய்கின்ற காரியத்தை, அறிந்து - தெரிந்துகொண்டு, பின்
- பிறகு,   நாவினோசை    -     வாயினாற்    பாடும்  கீதங்களும்,
நரம்பினெழுகுரல்   -   நரம்புக்கருவிகளினால்   (அதாவது : வீணை
முதலாகிய தத - விதத - கன - சுஷிரமென்னும் வாத்தியங்களினால்)
ஆகிய   சங்கீத   சப்தங்களும், தாவிலா - குறைவில்லாத, இலயம் -
தாளமும்,   பயில்   -   தங்கியிருக்கின்ற,  சாலை - நர்த்தனசாலை
முதலானவைகளை, காண் - பார்ப்பாயாக, எ-று.               (37)

491. படங்க டந்தணி தங்கி வல்குலார்
    நுடங்கு நுண்ணிடை நோவ நுவலரும்
    வடஞ்சு மந்த வனமுலை யின்பயன்
    றுடங்கு பின்னென மற்றவர் சொல்லினார்.

     (இ-ள்.) பின் -அதன்பிறகு, படங்கடந்து - ஸர்ப்பத்தினது பணா
முடியை   (உருவத்தினாலே)       ஜெயித்து,    அணிதங்கிய    -
அழகுபொருந்திய, அல்குலார் - அல்குலினையுடைய தேவிமார்களின்,
நுடங்கும் - அசைகின்ற, நுண் - மெல்லிதாகிய, இடை - இடையானது,
நோவ - நோகும்படியாக,   நுவலரும்   - சொல்லுதற்கரிய குணமான,
வடம் - முத்துமாலைகள் முதலியவைகளை, சுமந்த - அணிந்த, வனம்
- அழகிய,   முலையின்    -    ஸ்தனங்களிலுண்டாகும்,    பயன் -
காமசௌக்கிய  பலனை,   துடங்கு - அனுபவிக்கத் தொடங்குவாயாக,
என  - என்று, அவர் -அத்தேவர்கள், சொல்லினார் - சொன்னார்கள்,
எ-று.

     மற்று - அசை.                                     (38)

492. நீதி யைக்கட வார்பெரி யோர்கடா
    மாத லாலம ரன்னவை செய்தபின்
    காதி யைக்கடி யுந்திரு மாலடி
    போது கொண்டு புகழ்ந்து பணிந்தனன்.

     (இ-ள்.)  பெரியோர்கள்  தாம் - குணவந்தர்கள், நீதியை - நீதி
நெறியை,  கடவார் - தவறார்கள், ஆதலால் - ஆகையால், அமரன் -
ஸ்ரீதரதேவன்,  (அவர்கள்   சொற்படி),   அவை - அக்காரியங்களை,
செய்தபின்  -   செய்த பிறகு, காதியைக் கடியும் - காதிகர்மங்களைப்
போக்கின,   திருமால்   - 1ஜினேஸ்வரனுடைய,  அடி - பாதங்களை,
போதுகொண்டு  -   புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சித்து, புகழ்ந்து -
ஸ்துதித்து, பணிந்தனன் - வணங்கினான், எ-று.                (39)

_____________________________________________________

1இங்கு     ஜினேஸ்வரன்       என்றது             அத்தேவனது
விமானத்திலிருக்கப்பட்ட அக்கிருத்திமசைத்யாலயப் பிரதிமைகளை.