வேறு.
49. சுண்ண மெண்ணெய்ச் சொரிந்தனர் தூரியம்
விண்ணை விம்மி முழங்கின வெண்கொடி
யண்ண றோன்றலு மெங்கணு மாடின
புண்ணி யன்னகர் பொன்னக ராயதே.
(இ-ள்) சுண்ணம்
- கந்தப்பொடிகளையும், எண்ணெய் -
சம்பங்கி எண்ணெய் முதலானவைகளையும், சொரிந்தனர் -
இராஜ
குடும்பத்தார் வழங்கினார்கள், தூரியம் - (அஷ்டாதச) வாத்தியங்கள்,
விண்ணை - தேவலோகத்தில் சார்ந்து, விம்மி
- அதிகரித்து,
முழங்கின - சப்தித்தன, வெண்கொடி - வெள்ளைத் துவசங்களானவை,
அண்ணல் - சிரேஷ்டனாகிய புத்திரன், தோன்றலும் - பிறத்தலும்,
எங்கணும் - எவ்விடங்களிலும், ஆடின - அசைந்தன, புண்ணியன் -
புண்ணியவந்தனாகிய (இவ்வரசனது), நகர் -
பட்டணமானது,
பொன்னகராயது - தேவலோகத்துக்குச் சமானமாயிற்று, எ-று. (49)
50. சஞ்ச யந்த னெனும்பெய ரானவ
னஞ்சு தாயர்தங் கைவழி யந்திவாய்
மஞ்சி லாமதி போல வளர்ந்தபி
னஞ்சி லோதியர்க் கின்னமிர் தாயினான்.
(இ-ள்) சஞ்சயந்தனெனும்
- சஞ்சயந்தனென்கிற, பெயரான் -
பெயரினாலே, அவன் - அப்புத்திரன், அஞ்சுதாயர்தம் -
ஐவகைத்
தாய்மார்களுடைய, கைவழி -
கைவசத்தில், அந்திவாய் -
சந்தியாகாலத்தில் உண்டாகிய, மஞ்சிலா - களங்கமில்லாத, மதிபோல,
மூன்றாம்பிறைச் சந்திரன்போல், வளர்ந்த - கிரமத்தால்
வளர்ந்த,
பின் - பிற்பாடு, 1அஞ்சிலோதியர்க்கு
- ஐந்துவகைப் பாகுபாட்டில்
அமைந்த கூந்தலையுடைய ஸ்த்ரீமார்களுக்கு, இன் - இனிமையாகிய,
அமிர்தாயினான் - அமிர்தத்துக்குச் சமானமானான் (யெனவனத்தை
யடைந்தான் என்றபடி), எ-று.
(50)
வேறு.
51. குஞ்சிக ணிழன்மணிக் கதிர்க்கு ழாமுக
மஞ்சிலா மதிபுய மணியெ ழுக்கண்மார்
___________________________________________
1 சில்
- தகட்டணி யென்னப்படும்; இது
கூந்தலின்
உச்சியிலிடப்படும் ஒரு வகை
ஆபரணம்; இக்காலத்தில்
சடைபில்லையென வழங்குவது. ஆதலின், ‘அஞ்சிலோதி" என்பதை
"அம் - சில் - ஓதி" எனப்பிரித்து ‘அழகிய தகட்டணியையணிந்த
கூந்தல்" எனப் பொருள் கொள்ளலும் பண்டைய உரையாசிரியர்களிற்
பெரும்பாலார் வழக்கு. |