நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 231


 

497. ஒன்றின் மேல்வைத்த முப்பதேழ் நான்கிரண்
    டொன்றின் மேலொன்று மூன்றுமூன் றொன்பது
    ஒன்று மேலொன்று மாந்துறக் கப்புரை
    நின்ற மேலுற கீழ்நின்ற நீதியால்.

     (இ-ள்.) துறக்கப்புரை -ஸ்வர்க்கலோக படலங்கள்,ஒன்றின்மேல்
வைத்த    முப்பது    -    (ஸௌதர்ம ஈசான கற்பத்தில்) ஒன்றுக்கு
முன்னாகவைத்த  முப்பதும், (அதாவது : முப்பத்தொரு படலங்களும்),
ஏழ்  -  (ஸநத்குமார மாஹேந்திர கல்பத்தில்) ஏழுபடலமும், நான்கு -
(பிரம்ம, பிரம்மோத்திர கல்பங்களில்) நான்கு படலங்களும், இரண்டு -
(லாந்தவ, காபிஷ்ட,  கல்பங்களில்)   இரண்டு படலங்களும், ஒன்று -
(சுக்ர,   மகாசுக்கிர   கல்பங்களில்)   ஒரு படலமும், மேலொன்று -
(சதாரசஹஸ்ரார   கற்பங்களில்)     ஒரு படலமும்,       மூன்று -
(ஆனதபிராணத கற்பங்களில்) மூன்று படலங்களும், மூன்று - ஆரண
அச்சுத   கல்பத்தில்)    மூன்று      படலங்களும்,      ஒன்பது -
(நவக்கிரைவேயகத்தில்)     ஒன்பது     படலங்களும்,     ஒன்று -
(நவாணுதிசையில்) ஒரு படலமும், மேலொன்று - (பஞ்சாணுத்தரத்தில்)
ஒரு படலமும்,   கீழ்நின்ற  - இந்தப் பிரகாரம் கீழ்நின்றவைகளாகிய
சௌதர்ம   ஈசான  கல்பங்களினின்றும், மேலுற - மேலே பொருந்த,
(அதாவது :   ஸர்வார்த்தசித்தி   பரியந்தம்),   நீதியால் - இப்போது
சொன்ன    வரிசைக்    கணக்காக,  நின்ற - ஒன்றின்மேலொன்றாக
இருக்கப்பட்டனவாய், ஆம் - ஆகும், எ-று.                 (44)

498. இரண்டு மேழுமீ ரைந்துமீ ரேழுமா
    யிரண்டு மேற்சென்றி ருபத்தி ரண்டெய்த
    திரண்ட வற்றின்மே லொன்றுசென் றாயுக
    முரண்டெ ழுங்கடன் முப்பத்து மூன்றுமே.

     (இ-ள்.)  முரண்டு  -  சப்தித்து,  எழும் -  எழுகின்ற, கடல் -
கடல்களானவை,   இரண்டு  - ஸௌதர்ம  ஈசான கல்பத்திலிராநின்ற
தேவர்களுக்கு    இரண்டும்,    ஏழு    - ஸநத்குமார   மாஹேந்திர
கற்பத்திலிராநின்ற   தேவர்களுக்கு    ஏழும்,    ஈரைந்து  - பிரம்ம
பிரம்மோத்தர கல்பத்திலிராநின்ற தேவர்களுக்குப் பத்தும், ஈரேழுமாய்
- லாந்தவகாபிஷ்ட  கல்பத்திலிராநின்ற தேவர்களுக்குப் பதினாலுமாய்,
இரண்டு   மேற்   சென்று - அதன்மேல் ஒவ்வொரு யுகளங்களுக்கும்
இரண்டிரண்டு   அதிகமாகச்    சென்று  (அதாவது : சுக்ரமஹா சுக்ர
கல்பத்துத்தேவர்களுக்குப்   பதினாறு    கடலும்,    சதாரஸஹஸ்ரார
கல்பத்திலிராநின்ற    தேவர்களுக்குப் பதினெட்டுக் கடலும், ஆனதப்
பிராணத கல்பத்தாருக்கு   இருபது   கடலும்   ஆய்   அதன்மேல்),
இருபத்திரண்டு  - ஆரண  அச்சுத கல்பத்திலிராநின்ற தேவர்களுக்கு
இருபத்திரண்டு  கடலும்,  திரண்ட - சேர்க்கப்பட்ட, அவற்றின்மேல் -
அந்த