242மேருமந்தர புராணம்  


 

522. நெருப்பினை யுமிழ்ந்திடும் நிழல்கள் புக்கிடில்
    விருப்புறு மவைவிப ரீத மாய்வருஞ்
    செருச்செயா தாரிலைத் திரியுந் தீவளி
    யுரைப்பதென் னவனினி நரகத் துற்றதே.

     (இ-ள்.)   (இன்னும்  அவன்) நரகத்து - நரகத்திலே, நிழல்கள்
புக்கிடில்   -    நிழல்    வேண்டுமென   இச்சித்துத் தோப்புகளின்
நிழல்களிலடைந்தால்,  (அத்தோப்புகள்), நெருப்பினை - அக்கினியை,
உமிழ்ந்திடும்   - மேலே சொரியும், (அதுவன்றியும்), விருப்புறுமவை -
அவனால்  இச்சிக்கப்பட்டவைகளெல்லாம்,    விபரீதமாய் - நினைத்த
அவற்றிற்கு    எதிரிடையாக    மாறுபாடாய்,   வரும் - உண்டாகும்,
செருச்செயாதார்   - அவனோடு சண்டை செய்யாதவர்கள், இல்லை -
அந்நரகத்திலில்லை,   தீவளி    - அக்கினிக்காற்று, திரியும் - அவன்
சஞ்சரிக்கும்    எவ்விடங்களிலும்     மிகுதியாய்   உலாவும், இனி -
இன்னமும், அவன்    - அந்நாரகன், உற்றது - அடைந்த துயரத்தில்,
உரைப்பது   என் - சொல்லக்கூடியது என்ன விருக்கின்றது, (எல்லாத்
துன்பத்தையுமே அடைந்தான்), எ-று.                        (69)

வேறு.

523. நாகத்தைப் போலு நாகம் நாகத்தால் நாக மெய்த
    நாகத்தை நாகந் துய்த்து நாகந்தா னரக மெய்த
    மேகத்தி னோடுந் திங்கள் வீழ்ந்துடன் கிடந்த தென்ன
    நாகத்தின் கொம்பு முத்தும் நரியெனுங் குறவன் கொண்டான்.

     (இ-ள்.)   (மேற்கூறியபடி) நாகத்தைப்போலும் - பர்வதத்துக்குச்
சமானமாகிய,   நாகம்    -    அசனிகோடமென்னும் யானையானது,
நாகத்தால்   -  குக்குடஸர்ப்பத்தினால், (கடிக்க இறந்து), நாகமெய்த -
தேவலோகமடைய,   நாகத்தை    - அந்த    ஸர்ப்பத்தை, நாகம் -
குரங்கானது, துய்த்து - கடித்துத் தின்றுவிட, நாகந்தான் - அக்குக்குட
ஸர்ப்பமானது,     நரகமெய்த    -     மூன்றா   நரகத்தையடைய,
மேகத்தினோடும்    - மேகக்  கூட்டத்தோடும், திங்கள் - சந்திரனும்,
வீழ்ந்து - பூமியில் விழுந்து, உடன் - ஒரு தன்மையாக, கிடந்ததென்ன
- கிடந்தது    போல, (கரிய    மேனியும்    வெள்ளிய தந்தங்களும்
விளங்கக்கிடந்த)    நாகத்தின் - அந்த யானையினுடைய, கொம்பும் -
கொம்பையும்,     முத்தும்     - முத்துக்களையும்,     நரியெனும் -
நரியனென்னும்  பெயரையுடைய, குறவன் - ஒரு வேடன், கொண்டான்
- கைப்பற்றிக் கொண்டான், எ-று.                           (70)

524. தந்தமு முத்துங் கொண்டு தனமித்தன் றன்னைக் கண்டு
    வெந்திறல் வேட னீந்து வேண்டுவ கொண்டு போனான்