ஜினேஸ்வரனுடைய, செழும் - செழுமை பொருந்திய, பொற்பாதம் -
அழகிய திருவடிகளை, மத்தகத்து - சிரசில், அணிந்து - தரித்து,
நான்கு மங்கலம் - (அரஹந்தர் மங்களம், ஸித்தர்மங்களம்,
ஸாதுமங்களம், தர்மங்களமென்னும்)நான்கு மங்களங்களை, பயின்று -
சேர்ந்து (அதாவது : பாவித்து), வையத்து - உலகத்தில்,
உத்தமர்தம்மை - உத்தமர்களாகிய பஞ்சபரமேஷ்டிகளை, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி, சரணம்புக்கு - அவர்கள் பதமே ரக்ஷணையாக
அப்பதத்தை அடைந்து, உயிரை - ஸகலஜீவன்களையும், ஓம்பி -
உபசரித்து,தத்துவம் பயின்று - ஸ்வாத்மதத்துவத்தில் பழகி, (அதாவது :
ஹேயோபாதேயதத்துவவிசாரணை செய்து), தானம் - ஸத்
பாத்திரங்களில் செய்யும் தானங்களோடும், தவத்தோடு -
தபோபாவனையுடனும், தயாவில் - ஜீவதயவிலும், சென்றான் -
சேர்ந்தான், எ-று. (83)
537. இறைவன தறத்தை யேந்தல் சேர்ந்தபி னிராம தத்தை
கறைகெழு வேலி னானைக் கைவிடா திருந்து நோற்று
நிறையழி காத லாலே நிதானத்து நின்று சென்றாள்
கறையிலா வாயு நீங்கிக் கற்பமா சுக்கி லத்தே.
(இ-ள்.)(இவ்வாறு) இறைவனது - ஸர்வஜ்ஞனால் சொல்லப்பட்ட,
அறத்தை . ஸ்ரீஜினதருமத்தை, ஏந்தல் - பெருமையிற் சிறந்தவனாகிய
பூர்ணச்சந்திர குமாரன், சேர்ந்தபின் - சேர்ந்த பிறகு, இராமதத்தை
இராமதத்தாரியாங்கனை, கறைகெழுவேலினானை - இரத்தக்கறை
பொருந்திய வேலாயுதத்தையுடைய அக்குமாரனை, கைவிடாது - விட்டு
நீங்காமல், இருந்து - அவனோடு கூடவேயிருந்து, நோற்று -
மஹாநோன்பு முதலானவைகளை நோற்று, நிறையழி -
மனோநிறைநழுவும், காதலாலே - ஆசையாலே, நிதானத்து நின்று -
பவாந்தரத்திலும் இந்தப் பூர்ணச்சந்திர குமாரனையே புத்திரனாகப்
பெறுவேனாகவென்னும் நிதானத்திலே செலுத்திய மனதினோடு நின்று,
கறையிலா - குற்றமில்லாத, ஆயு - தனதாயுஷ்யமாகிய
மனுஷ்யாயுஷ்யம், நீங்கி - நீங்கி, கற்பமாசுக்கிலத்து -
மஹாசுக்ரகல்பத்தில், சென்றாள் - (தேவாயுஷ்யமுதிப்ப) அடைந்தாள்,
எ-று. (84)
538. பாகரப் பிரபை யென்னும் விமானத்துப் பருதி போல
பாகரப் பிரப னென்னுந் தேவனாய்ப் பாவை தோன்றி
நாகர்வந் திறைஞ்ச வின்ப மூர்த்தியாய் நடுவி ருந்தாள்
சாகரம் பத்தோ டாறு தனக்குவாழ் நாள தாமே.
(இ-ள்.) (அவ்வாறடைந்த பின்) பாகரப்பிரபையென்னும் -
பாஸ்கரப்பிரபையென்கிற, விமானத்து - தேவ விமானத்திலே,
பருதிபோல - சூரியனைப்போல, பாகரப்பிரபனென்னும் - பாஸ்கரப்
பிரபனென்கிற, தேவனாய் - தேவனாகி, |