பாவை - சித்திரப்பாவை போன்ற விராமதத்தை, தோன்றி -
அவதரித்து, நாகர் - ஸாமான்ய தேவர்கள், வந்திறைஞ்ச - வந்து
வணங்க, இன்பமூர்த்தியாய் - ஸௌக்கியரூபத்தை யுடையவனாகி,
நடுவு - ஸாமான்ய தேவர்கள் தன்னைச்சூழ அவர்களினிடையில்,
இருந்தாள் - தங்கினாள், தனக்கு - அந்தப் பாஸ்கரப்
பிரபதேவனாகப்பிறந்த தனக்கு, வாழ்நாள் - ஆயுஷ்யநாளானது,
சாகரம் பத்தோடாறது - பதினாறு கடற்காலம், ஆம் - ஆகும்,
எ-று. (85)
539. ஈரெட்டா மாயி ரத்தாண் டிடைவிட்டின் னமுத முண்ணா
வீரெட்டாம் பக்கந் தன்னை யிடையிடை விட்டு யிர்த்து
மோரெட்டின் பாதி யாய நரகத்தி லவதி யொட்டா
வோரெட்டுக் குணங்கள் வல்ல வுடம்பைந்து முழமு யர்ந்தான்.
(இ-ள்.) (அங்ஙனம் தோன்றிய அத்தேவன்) ஈரெட்டாமா
யிரத்தாண்டு - பதினாறாயிரம் வருஷங்கள், இடைவிட்டு - நடுவிற்
செல்லவிட்டு, (அதன் பிறகு), இன்னமுதம் - இனிமையாகிய
தேவாமிர்தத்தை, உண்ணா - மனதினால் புஜித்தவனாகி, ஈரெட்டாம்
பக்கந்தன்னை - பதினாறு பட்சங்களை, இடையிடைவிட்டு - மத்தியில்
மத்தியில் செல்லவிட்டு (அதாவது : எட்டுமாதத்திற்கொருதடவை),
உயிர்த்து - உச்வாஸ நிச்வாஸங்களையுடையவனாகி, ஓரெட்டின்
பாதியாய - ஒரு எட்டில் பாதியான, நரகத்தில் - நாலாநரக பரியந்தம்,
அவதியொட்டா - அவதிஜ்ஞானத்தாலறியும் தன்மை சேர்ந்தவனாகி,
(தான்பெற்ற) ஒரெட்டுக்குணங்கள் வல்லவுடம்பு - (அணிமா மஹிமா
கிரிமா லகிமா ப்ராப்தி ப்ராகம்யம் ஈசித்வம் வசித்வம் என்னும்)
அஷ்டசித்திகளைப் பெறவல்லதாகிய சரீரத்தில்,ஐந்து முழ முயர்ந்தான்
- ஸ்வபாவத்தால் ஐந்துமுழ உன்னதத்தையடைந்தான், எ-று. (86)
540. மின்னரிச் சிலம்பி னோசை மிளிருமே கலையி னோசை
யின்னரம் பிசையி னோசை யெழுந்தகீ தத்தி னோசை
மின்னுடங் கிடையி னார்தம் விளைந்துலா மொழியி னோசை
தன்னுளங் கவர வின்சொல் வீசாரத் தோடு நாளால்.
(இ-ள்.) (இங்ஙனம் பெற்று அவன்) மின் - மின்னல்போல்,
நுடங்கும் - அசைகின்ற, இடையினார் தம் - இடையையுடைய
ஸ்திரீமார்களின், மின் - பிரகாசம் பொருந்திய, அரி - பருக்கைக்
கற்களையுடைய, சிலம்பினோசை - பாதச்சிலம்புகளினது சத்தமும்,
மிளிரும் - ஒளியைவீசும், மேகலையின் - மேகலாபரணத்தினது, ஓசை
- ஓசையும், இன் - இனிமையாகிய, நரம்பிசையின் - நரம்புக்
கருவிகளாகிய வீணை முதலிய வாத்தியங்களினாலாகிய கீதங்களினது,
ஓசை - சத்தமும், எழுந்த - கண்டங்களினா லெழுப்பிப்பாட
உண்டாகிய, கீதத்தின் - வாய்ப்பாட்டாகிய சங்கீதங்களது, ஓசை -
சத்தமும், விளைந்து - வாயில் உண்டாகி, |